Saturday, July 30, 2005

ஆரோக்கியம் என்றொரு நோயாளி

இஸ்லாத்தின் மீது தாக்குதல் தொடுக்க வேண்டும் என்பதற்காகவே பார்ப்பன மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியிருக்கும் அன்பர் ஆரோக்கியம்.
இவர் தான் தொடுக்கும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் கிறிஸ்தவர்களின் இணைய பக்கங்களிலிருந்தே ஆதாரங்களை எடுத்து வைக்கிறார். இந்து மதத்தின் கருத்துக்களால் இஸ்லாத்தை வெல்ல முடியாது; இந்து மதத்தின் கருத்துக்கள் இன்றைய உலகிற்குப் பொருந்தாது என்பதை இவர் ஏற்றுக் கொள்கிறாரா?

முஸலிம்களை கிறிஸ்துவத்திற்கும் பௌத்தத்திறகும் அழைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறும் இவர், ஏன் அவர்களை இந்து மதத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறவில்லை? அவருக்குத் தெரியும்... முஸ்லிம்கள் அடிமைக் காற்றைச் சுவாசித்ததில்லை. உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பார்க்கத் தெரியாதவர்கள். இவர்கள் இந்துக்களாக மாறினால் பார்ப்பனராகிய நமக்கு வேட்டு வைத்துவிடுவார்கள்.

பார்ப்பனரல்லாத இந்துக்களே! விழித்துக் கொள்ளுங்கள். அவருடைய பதிவுகளுக்கு பதில் அவருக்கு நாம் இடும் பின்னூட்டங்களிலேயே எழுதி வருகிறோம். பின்வரும் அவருடைய பின்னூட்டமே இப்பதிவை எழுத என்னைத் தூண்டியது.

http://bhaarathi.net/sundara/?p=226#comments
"மநுவில் சொல்லப்பட்ட விதிகளின் படி பிராமனனை தீதாக பேசும் சூத்திரனின் நாக்கை அறுக்க வேண்டும். சேரிகளில் வேதம் படிப்பது தெய்வங்களை கேவலப்படுத்துவதற்கு சமம். அறிஞன் இபின் வாரக் சொன்னது போல் இந்து மதம் இந்தியாவில் இல்லாமல் இருந்தால் இந்தியா என்றொரு தேசமே அறியப் பட்டிருக்காது. ஜாதிய வேறுபாடுகள் மனிதர்களின் தன்மையை வேறுபடுத்தி அறிய அவசியமாகின்றன. இரத்தத்தில் கூட பிரிவுகள் இருப்பதை ஏற்றுக் கொண்ட மனிதன்இ ஜாதிகளை எதிர்ப்பது வியப்பே. ஜாதிகள் இல்லையடி பாப்பா என்பதெல்லாம்இ பாப்பாக்களுக்கு சொல்லப் பட்டது. ஜாதியை வெறுத்திருந்தால் பாரதி, ஜாதிகள் இல்லையடா பார்ப்பான் என்று சொல்லி இருப்பான்."

Friday, July 22, 2005

காவிரி தாய்

தமிழ் நாடு மற்றும் கர்நாடக அரசியல்வாதிகளுக்கு அவர்களின் அரசியல் வாழ்வு மரித்துப் போய்விடாமல் காக்கும் தாய்.
இந்திய தேசிய ஒற்றுமையை சில சந்தர்ப்பங்களில் கேள்விக்குறியாக்குவதும் இதே தாய்தான்.
அண்டை நாடான வங்கதேசத்துடன் நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தம் செய்து கொள்ள முடிந்த உங்களால் உங்கள் மாநிலங்களுக்குள் ஒப்பந்தம் செய்து கொள்ள முடியாததும் என்னால்தான் என்று கொக்கரிப்பதும் இந்த தாய்தான்.
அறிமுகம் போதுமென்று நினைக்கிறேன். இந்த தாய் யாருக்குச் சொந்தம்? தமிழ்நாட்டில் நாம் இருப்பதால் நமக்கும் அதில் உரிமை உண்டு என்று கேட்கிறோம். உரிமை இருக்கலாம். ஆனால் பற்றாக்குறை என்று வரும்போது...? வீராணம் நீரை சென்னைக்கு கொண்டு வரும் திட்டத்திற்கான எதிர்ப்புகளை இங்கு நினைவுறுத்த வேண்டுகிறேன்.
என்னதான் மாற்று? 24.07.2005 குமுதம் ரிப்போர்டரில் தீர்வு ஒன்று கண்டேன். அது சரியான தீர்வாக இருக்கக்கூடும் என்று கருதுகிறேன். மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் கூடுதல் அதிகாரம் பெற்றுள்ள கலைஞர் அவர்கள் இத்திட்டத்தை செயல்படுத்த முணைய வேண்டும்.

Wednesday, July 20, 2005

அறிமுக உரை

வணக்கம். சமீபகாலமாக இணையத்துடனான என் தொடர்புகள் அதிகமாகிக் கொண்டே சென்றதின் விளைவே இந்த வலைப்பூ. வரவேற்பீர்கள் என்று நம்புகிறேன்.