Thursday, January 08, 2009

ஹமாஸ் - போராளிகளா? தீவிரவாதிகளா?


பாலஸ்தீன் என்னும் நாட்டின் ஒரு பகுதியை சம்பந்தமே இல்லாத மூன்றாம் நாடுகள் பிரித்து இஸ்ரேல் என்றொரு நாட்டை உருவாக்கினர். தங்கள் நாட்டைப் பிளவுபடுத்துவதை அந்நாட்டு மக்கள் எதிர்க்கின்றனர். புதிததாக உருவாகிய நாடு வல்லரசுகளின் ஆயுதத் துணையோடு தங்களைக் காத்துக் கொண்டது மட்டுமின்றி முழு பாலஸ்தீனத்தையும் ஆக்ரமிக்கின்றனர். ஆக்கிரமிப்பு எப்படியெல்லாம் நிகழ்த்தப்படுகிறது என்பதை யூத வரலாற்றாசிரியரான இலன் பெப்பே என்பவரின் இந்த செவ்வியின் மூலம் ஓரளவு அறியலாம். இதனை எதிர்த்து பாலத்தீனியர்கள் போராடி வருகின்றனர். இதுவே இஸ்ரேல் பாலத்தீனப் பிரச்சனையின் சுருக்கம்.

பாலஸ்தீனப் பகுதியை ஆக்ரமித்து உருவாக்கப்பட்ட இஸ்ரேலை அங்கீகரித்த இந்தியா உள்பட உலக நாடுகள் மற்றும் உலக நாடுகளின் அமைப்புகள் இதுவரை பாலஸ்தீன் எனும் நாட்டை அங்கீகரிக்கவே இல்லை. அமைதியாக இருங்கள். அமைதியாக இருங்கள் கூறிக் கொண்டிருக்கிறார்களே ஒழிய 1949 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தின்படி வரையறுத்த எல்லைகள் போக மற்ற பகுதிகள்தான பாலஸ்தீன் என்று கூட இன்றுவரை ஐக்கிய நாடுகள் சபையோ, பெரியண்ணன் அமெரிக்காவோ அறிவிக்கவில்லை.
 
பொதுவாகவே ஒரு நாடு மற்றவர்களால் ஆக்ரமிக்கப்பட்டாலோ அல்லது அந்த நாட்டின் அரசு இனவெறி அரசாக இருந்தாலோ, ஆக்ரமிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் அல்லது இனவெறியால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் மீதான ஆக்ரமிப்பை, தங்கள் மீதான அடக்குமுறையை எதிர்த்து தனியாகவோ அல்லது குழுவாகவோ இணைந்து போராடுவர். இத்தகைய போராட்டங்கள் அமைதி வழியிலோ அல்லது ஆயுத வழியிலோ அமைந்ததாக இருக்கும். சர்வதேச சட்டங்கள் இந்த இருவகைப் போராட்டங்களையும் ஆதரிக்கவே செய்கின்றன.
 

ஆயுதங்களை பகிரங்கமாக கையாளலாம். அவர்கள் ஆயுதப் போராட்டம் செய்யலாம். இத்தகைய குழுக்கள் அந்த நாட்டின் இராணுவமாகவே கணிக்கப்படும்.
 
1949ஆம் ஆண்டு ஐ.நா. சபையின் ஜெனீவா மாநாட்டின் போது நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இப்படிக் கூறுகிறது.
 
 
எனவே பாலஸ்தீனத்தில் தங்கள் உரிமைக்காகப் போராடும் ஆயுதம் ஏந்திய குழுக்கள் அனைவருமே போராளிகள்தானே ஒழிய தீவிரவாதிகள் அல்ல. சமீபத்தில் இலங்கைத் தழிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் கூறிய கருத்து உலகின் எந்தப் பகுதிக்கும் பொருந்தக் கூடியது. அவர் கூறியதின் சாரம் : "உரிமைகள் மறுக்கப்படும் போது தீவிரவாதம் பிறந்தே தீரும். போராளிகள் தீவிரவாதிகளா இல்லையா என்பதை காலம் முடிவு செய்யட்டும். நாளையே அங்கு ஒரு சுதந்திர நாடு பிரகடனப்படுத்தப்பட்டால் போராளிகள் அனைவரும் தியாகிகளாகப் பார்க்கப் படுவர். நமது வாஞ்சிநாதனைப் போல" என்று கூறினார். இது பாலஸ்தீனியர்களுக்கும் பொருந்தும்.
 
பாலஸ்தீன விடுதலைக்காக பல்வேறு குழுக்கள் பாலஸ்தீன விடுதலை அமைப்பு (PLO) என்ற பெயரில் இயங்கி வந்தபோது அதன் செயல்பாடுகளில் திருப்தி அடையாத சிலர் தோற்றுவித்ததுதான் ஹமாஸ் என்ற அமைப்பு.  ஹமாசைத் தோற்றுவித்ததில் இஸ்ரேலின் பங்கும் இருப்பதாகவும் சிலர் சொல்வதுண்டு. பாலத்தீன விடுதலை அமைப்பை (PLO) பலவீனப்படுத்த வேண்டும் என்பதற்காக ஹமாஸ் இயக்கத்திற்கு இஸ்ரேல் மறைமுக நிதி உதவி செய்தது என்று UPI செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. 

ஆரம்பத்தில் ஆயுதம் ஏந்திப் போராடிய இந்த அமைப்பு அரசியல் ரீதியாகவும் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகாண வேண்டி தேர்தல் அரசியலில் நேரடியாகப் பங்கு பெற்றது. 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற பாலஸ்தீன நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்டு அதன் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா என்பவர் தலைமையில் ஆட்சியமைத்தது. ஹமாஸ் அரசு அமைந்ததிலிருந்து பல்வேறு நெருக்கடிகளை இஸ்ரேல் கொடுத்து வந்தது. இந்நிலையில் 2007ஆம் ஆண்டு பாலஸ்தீன அதிபர் மஹ்மூது அப்பாசின் கட்சியினருக்கும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையில் கடும் சன்டை ஏற்பட்டு, இறுதியில் காஸா பகுதியின் நிர்வாகம் ஹமாஸ் இயக்கதினரிடமும், மேற்குக் கரை பகுதியின் அதிகாரம் அப்பாசின் பதஹ் கட்சியினரிடமும் பகிர்ந்து கொள்ளப் பட்டது.
 
காஸாவின் அதிகாரம் ஹமாஸ் இயக்கதிற்கு வந்து சேர்ந்த 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் காஸா பகுதிக்கு மின் இணைப்பு துண்டிப்பு, பெட்ரோல் வழங்காமை, எல்லைகள் அடைக்கப்பட்டது என்று உலகின் மிகப் பெரும் சிறைச்சாலையாக காஸா பகுதியை இஸ்ரேல் மாற்றியது.
 
இத்தனையையும் பொறுத்துக்கொண்டு எப்படித்தான் இருக்க முடியும்? ஏற்கனவே செத்துக் கொண்டிருக்கும் மக்கள் போராடிச் சாக துணிந்து விட்டனர். இவர்கள் தீவிரவாதிகளா? இவர்களைச் சுதந்திரப் போராட்ட வீரர்களாகத்தான் பாலஸ்தீனர்கள் பார்க்கின்றனர். எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.

Monday, January 05, 2009

தீவிரவாதிகள் கொல்லப்பட்டு வருகின்றனர்

காஸா. உலகின் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதிகளில் ஒன்று. உலகின் மிகப்பெரும் சிறைச் சாலையும் அதுதான். சிறையில் அடைத்தது போதாதென்று பத்து நாட்களாய் நரவேட்டையும் நடந்து கொண்டிருக்கிறது. கொல்லப் பட்டவர்களில் 25 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு ஒன்று கூறுகிறது. 500க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனராம். 2000க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனராம். குண்டு பட்டு மரணிக்காவிட்டாலும் காசநோயை ஏற்படுத்தும் வகையிலான யுரேனியம் கலந்த குண்டுகளைப் பயன்படுத்துகிறதாம். தீவிரவாதிகள் செத்து மடியட்டும்.

































































































































































































































































































































































































தீவிரவாதிகள் கொல்லப்பட்டுவிட்டனர். இனி யூதர்களுக்கு உலகில் எங்குமே பிரச்சனை வராது என்ற மகிழ்ச்சியில்  சியோனிச யூதர்கள்.