டோண்டு - இஸ்ரேல் - சமுத்திரா
கால்காரி சிவா என்பவர் என் அரேபிய அனுபவங்கள் என்ற தலைப்பில் தனக்கு அரேபிய நாடுகளில் ஏற்பட்ட அனுபவங்களை எழுதி வருகிறார். அதற்கு பின்னூட்டமளித்த டோண்டு அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்...
இந்த அரேபியன்களுக்கு திமிர் அதிகம். அதுவும் சவுதிகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். இந்தியர்கள் என்றால் அவர்களுக்கு இளப்பமே. இந்துக்களைப் பற்றி அவர்கள் அபிப்பிராயம் சொல்லிக் கொள்ளும்படியில்லை.
அவன்களிடம் போய் வேலை செய்யவேண்டும் என்பது துரதிர்ஷ்டவசமானதே.
நான் ஐ.டி.பி.எல்லில் வேலைக்கு சேர்ந்தபோது எல்லா விஷயத்திலும் மகிழ்ச்சிதான், ஒரு விஷயத்தைத் தவிர. அல்ஜீரியாவில் வேலை என்றார்கள். ஐயோ இஸ்ரேலுக்கு விரோதியான அரபு நாடு ஒன்றுக்கு போக வேண்டியிருக்கிறதே என்பதில்தான் சோகம். நல்ல வேளையாக அல்ஜீரிய வேலை இல்லை என்று ஆயிற்று. பிழைத்தேன்.
அன்புடன்,டோண்டு ராகவன்
---
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான அனுபவங்கள் கிடைக்கக்கூடும். அந்த வகையில் கால்காரி சிவாவுக்கு அவர் கூறுவது போன்றே நடந்திருந்தால் வருத்தப்படக்கூடியதே.
நான் துபையில் பணியாற்றியபோது எனக்கு இருவகையான அனுபவங்களும் கிடைத்தது. இராம.கி. ஐயா அவர்களும் தனக்கு இருவகையான அனுபவங்களும் கிடைத்தது என்று கூறுகிறார்.
அரேபிய நாடுகள் எதிலும் பணிபுரிந்திடாத டோண்டு அவர்கள், அரேபியர்களை எதிர்ப்பதற்குச் சொன்ன காரணம் எனக்கு வியப்பை அளித்தது. எனவே நான் இப்படி கேட்டேன்...
Dondu Said...
//ஐயோ இஸ்ரேலுக்கு விரோதியான அரபு நாடு ஒன்றுக்கு போக வேண்டியிருக்கிறதே என்பதில்தான் சோகம்.//
இஸ்ரேல் டோண்டு அய்யாவுக்கு தாய்நாடா? அல்லது இரத்த சம்பந்தம் ஏதேனும் உள்ளதா? இஸ்ரேலுக்கு விரோதி என்றால் இந்தியரான இவருக்கு என்ன வந்தது?
ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள் என்பதற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்குமோ?
வழக்கம் போலவே இந்த கேள்விக்கு சமுத்திரா தன்னுடைய தேசபக்தி பதிலை இப்படி கூறுகிறார்...
எல்லாம் ஒரு நன்றி உனர்வு தான் அய்யா.
வேறு எந்த நாடு நமக்கு அவர்களின் வார்ரிசர்வுகளில் இருந்து அவசர-அவசரமாக அம்யூனிஷன் சப்பளை செய்தது கார்கில் போரின் போது?
டோண்டு அவர்கள் ஐ.டி.பி.எல்லில் வேலைக்குச் சேர்ந்தது 1981ஆம் ஆண்டு.
அதிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றது 1993 ஆண்டு.
கார்கில் போர் நடைபெற்றது தேசப்பற்றை குத்தகைக்கு எடுத்துக்கொண்டுள்ள பா.ஜ.க. ஆட்சி நடைபெற்ற 1999ஆம் ஆண்டு.
தகவல்களை கூகிளிலிருந்து மட்டுமே எடுத்துப்போட்டால் இப்படித்தான் இருக்கும். பாவம், இவர் என்ன செய்வார்? 21 வயது பாலகன் அல்லவா? ஆனாலும் டோண்டு அய்யாவுக்கான என் கேள்வி தொடர்கிறது.