Thursday, January 08, 2009

ஹமாஸ் - போராளிகளா? தீவிரவாதிகளா?


பாலஸ்தீன் என்னும் நாட்டின் ஒரு பகுதியை சம்பந்தமே இல்லாத மூன்றாம் நாடுகள் பிரித்து இஸ்ரேல் என்றொரு நாட்டை உருவாக்கினர். தங்கள் நாட்டைப் பிளவுபடுத்துவதை அந்நாட்டு மக்கள் எதிர்க்கின்றனர். புதிததாக உருவாகிய நாடு வல்லரசுகளின் ஆயுதத் துணையோடு தங்களைக் காத்துக் கொண்டது மட்டுமின்றி முழு பாலஸ்தீனத்தையும் ஆக்ரமிக்கின்றனர். ஆக்கிரமிப்பு எப்படியெல்லாம் நிகழ்த்தப்படுகிறது என்பதை யூத வரலாற்றாசிரியரான இலன் பெப்பே என்பவரின் இந்த செவ்வியின் மூலம் ஓரளவு அறியலாம். இதனை எதிர்த்து பாலத்தீனியர்கள் போராடி வருகின்றனர். இதுவே இஸ்ரேல் பாலத்தீனப் பிரச்சனையின் சுருக்கம்.

பாலஸ்தீனப் பகுதியை ஆக்ரமித்து உருவாக்கப்பட்ட இஸ்ரேலை அங்கீகரித்த இந்தியா உள்பட உலக நாடுகள் மற்றும் உலக நாடுகளின் அமைப்புகள் இதுவரை பாலஸ்தீன் எனும் நாட்டை அங்கீகரிக்கவே இல்லை. அமைதியாக இருங்கள். அமைதியாக இருங்கள் கூறிக் கொண்டிருக்கிறார்களே ஒழிய 1949 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தின்படி வரையறுத்த எல்லைகள் போக மற்ற பகுதிகள்தான பாலஸ்தீன் என்று கூட இன்றுவரை ஐக்கிய நாடுகள் சபையோ, பெரியண்ணன் அமெரிக்காவோ அறிவிக்கவில்லை.
 
பொதுவாகவே ஒரு நாடு மற்றவர்களால் ஆக்ரமிக்கப்பட்டாலோ அல்லது அந்த நாட்டின் அரசு இனவெறி அரசாக இருந்தாலோ, ஆக்ரமிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் அல்லது இனவெறியால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் மீதான ஆக்ரமிப்பை, தங்கள் மீதான அடக்குமுறையை எதிர்த்து தனியாகவோ அல்லது குழுவாகவோ இணைந்து போராடுவர். இத்தகைய போராட்டங்கள் அமைதி வழியிலோ அல்லது ஆயுத வழியிலோ அமைந்ததாக இருக்கும். சர்வதேச சட்டங்கள் இந்த இருவகைப் போராட்டங்களையும் ஆதரிக்கவே செய்கின்றன.
 

ஆயுதங்களை பகிரங்கமாக கையாளலாம். அவர்கள் ஆயுதப் போராட்டம் செய்யலாம். இத்தகைய குழுக்கள் அந்த நாட்டின் இராணுவமாகவே கணிக்கப்படும்.
 
1949ஆம் ஆண்டு ஐ.நா. சபையின் ஜெனீவா மாநாட்டின் போது நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இப்படிக் கூறுகிறது.
 
 
எனவே பாலஸ்தீனத்தில் தங்கள் உரிமைக்காகப் போராடும் ஆயுதம் ஏந்திய குழுக்கள் அனைவருமே போராளிகள்தானே ஒழிய தீவிரவாதிகள் அல்ல. சமீபத்தில் இலங்கைத் தழிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் கூறிய கருத்து உலகின் எந்தப் பகுதிக்கும் பொருந்தக் கூடியது. அவர் கூறியதின் சாரம் : "உரிமைகள் மறுக்கப்படும் போது தீவிரவாதம் பிறந்தே தீரும். போராளிகள் தீவிரவாதிகளா இல்லையா என்பதை காலம் முடிவு செய்யட்டும். நாளையே அங்கு ஒரு சுதந்திர நாடு பிரகடனப்படுத்தப்பட்டால் போராளிகள் அனைவரும் தியாகிகளாகப் பார்க்கப் படுவர். நமது வாஞ்சிநாதனைப் போல" என்று கூறினார். இது பாலஸ்தீனியர்களுக்கும் பொருந்தும்.
 
பாலஸ்தீன விடுதலைக்காக பல்வேறு குழுக்கள் பாலஸ்தீன விடுதலை அமைப்பு (PLO) என்ற பெயரில் இயங்கி வந்தபோது அதன் செயல்பாடுகளில் திருப்தி அடையாத சிலர் தோற்றுவித்ததுதான் ஹமாஸ் என்ற அமைப்பு.  ஹமாசைத் தோற்றுவித்ததில் இஸ்ரேலின் பங்கும் இருப்பதாகவும் சிலர் சொல்வதுண்டு. பாலத்தீன விடுதலை அமைப்பை (PLO) பலவீனப்படுத்த வேண்டும் என்பதற்காக ஹமாஸ் இயக்கத்திற்கு இஸ்ரேல் மறைமுக நிதி உதவி செய்தது என்று UPI செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. 

ஆரம்பத்தில் ஆயுதம் ஏந்திப் போராடிய இந்த அமைப்பு அரசியல் ரீதியாகவும் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகாண வேண்டி தேர்தல் அரசியலில் நேரடியாகப் பங்கு பெற்றது. 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற பாலஸ்தீன நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்டு அதன் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா என்பவர் தலைமையில் ஆட்சியமைத்தது. ஹமாஸ் அரசு அமைந்ததிலிருந்து பல்வேறு நெருக்கடிகளை இஸ்ரேல் கொடுத்து வந்தது. இந்நிலையில் 2007ஆம் ஆண்டு பாலஸ்தீன அதிபர் மஹ்மூது அப்பாசின் கட்சியினருக்கும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையில் கடும் சன்டை ஏற்பட்டு, இறுதியில் காஸா பகுதியின் நிர்வாகம் ஹமாஸ் இயக்கதினரிடமும், மேற்குக் கரை பகுதியின் அதிகாரம் அப்பாசின் பதஹ் கட்சியினரிடமும் பகிர்ந்து கொள்ளப் பட்டது.
 
காஸாவின் அதிகாரம் ஹமாஸ் இயக்கதிற்கு வந்து சேர்ந்த 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் காஸா பகுதிக்கு மின் இணைப்பு துண்டிப்பு, பெட்ரோல் வழங்காமை, எல்லைகள் அடைக்கப்பட்டது என்று உலகின் மிகப் பெரும் சிறைச்சாலையாக காஸா பகுதியை இஸ்ரேல் மாற்றியது.
 
இத்தனையையும் பொறுத்துக்கொண்டு எப்படித்தான் இருக்க முடியும்? ஏற்கனவே செத்துக் கொண்டிருக்கும் மக்கள் போராடிச் சாக துணிந்து விட்டனர். இவர்கள் தீவிரவாதிகளா? இவர்களைச் சுதந்திரப் போராட்ட வீரர்களாகத்தான் பாலஸ்தீனர்கள் பார்க்கின்றனர். எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.

Monday, January 05, 2009

தீவிரவாதிகள் கொல்லப்பட்டு வருகின்றனர்

காஸா. உலகின் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதிகளில் ஒன்று. உலகின் மிகப்பெரும் சிறைச் சாலையும் அதுதான். சிறையில் அடைத்தது போதாதென்று பத்து நாட்களாய் நரவேட்டையும் நடந்து கொண்டிருக்கிறது. கொல்லப் பட்டவர்களில் 25 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு ஒன்று கூறுகிறது. 500க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனராம். 2000க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனராம். குண்டு பட்டு மரணிக்காவிட்டாலும் காசநோயை ஏற்படுத்தும் வகையிலான யுரேனியம் கலந்த குண்டுகளைப் பயன்படுத்துகிறதாம். தீவிரவாதிகள் செத்து மடியட்டும்.

































































































































































































































































































































































































தீவிரவாதிகள் கொல்லப்பட்டுவிட்டனர். இனி யூதர்களுக்கு உலகில் எங்குமே பிரச்சனை வராது என்ற மகிழ்ச்சியில்  சியோனிச யூதர்கள்.




Tuesday, June 24, 2008

தசாவதாரம் - ஒரு முஸ்லிமின் பார்வையில்

கமலின் எந்தப் படத்துக்கும் இல்லாத அளவு தசாவதாரம் பல்வகை விமர்சனங்களுக்குட்படுத்தப்பட்டு வருகிறது. இதுவே இந்தப்படத்தின் முதல் வெற்றி. இந்தப்படத்தில் இடம்பெறும் பாடலான " கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது - கடவுளை மட்டும் கண்டால் கல்லடி தெரியாது" என்பதுபோல் "வசூலை மட்டும் கண்டால் விமர்சனம் தெரியாது" என்று தயாரிப்பாளர் பாடிக் கொண்டிருக்கக் கூடும். தமிழ் சினிமா வரலாற்றில் ரெக்கார்டு கலெக்ஷன் என்று கூறிக் கொள்கிறார்கள். இதனால் கமலுக்கு இலாபம் ஒன்றும் இல்லை. அடுத்தபடம் வேறு ஒரு நிறுவனத் தயாரிப்பில் நடித்தால், இந்தப் படத்தின் வசூலைச் சுட்டி கூடுதலாகக் கேட்க வாய்ப்புண்டு. அடுத்த படம் சொந்தப் படம்தான். சோதனை முயற்சிதான் என்று கூறப்படுகிறது. வாழ்த்துவோம்.

தசாவதாரத்தின் பலம், பலவீனம், அதன் நுண்ணரசியல், அதன் விளைவுகள் (அதனால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏதேனும் இருக்குமா? - என்ன கொடுமைசார் இது?) என்று பலவும் அலசப்பட்டுவிட்ட வேளையில், அதன் வரலாற்றுத் தகவல் பிழையைச் சுட்ட வேண்டி இப்பதிவு.

"இயேசுவும் அல்லாஹ்வும் இந்தியாவுக்குள்ளும் அதன் அரசியலுக்குள்ளும் நுழையாத பன்னிரண்டாம் நூற்றாண்டில்..." என்ற கமலின் கணீர் குரலில் படம் தொடங்குகிறது. பிரச்சனை இதுதான்.

வைணவர்களுக்கும் சைவர்களுக்கும் இடையே நடைபெற்ற பிரச்சனைகளுக்கு கிறித்தவமோ, இஸ்லாமோ காரணமில்லை. முஸ்லிம் மன்னர்கள் இப்பிரச்சினையைத் தூண்டிவிட்டு, பிரித்தாளும் சூழ்ச்சிகள் எதிலும் ஈடுபடவில்லை என்பதைக் கூறுவதற்காகத்தான் கமல் இந்த வசனத்தை இடம்பெறச் செய்திருக்கக் கூடும் என்று நம்புகிறேன். காரணம் வரலாறு தெரியாதவரல்ல அவர். எனினும் மற்றவர்களுக்கும் தெரிய வேண்டுமென்பதற்காக....

வைணவ சைவப் பிரச்சனை நடக்கும்போது இந்தியா என்ற ஒற்றை நாடு உலகில் அமைந்திருக்கவில்லை. பல்வேறு நாடுகளைக் கொண்ட ஒரு கண்டமாகத்தான் அது அமைந்திருந்தது. தற்போதைய இந்தியா மட்டுமல்லாது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பர்மா ஆகிய நாடுகளையும் உள்ளடக்கிய பகுதிகளே இந்தியா என்று அறியப் பட்டது. இந்தியா என்று அறியப்படுவதற்கு காரணர்கள் அரேபியரே. "ஆதி மனிதர் ஆதம் வானிலிருந்து வெளியேற்றப் பட்டபோது அவர்கள் வந்திறங்கியது இந்தியப் பகுதியில்" என்று நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் அறிவிப்பதாக தாரீகுத்தப்ரீ எனும் நூலில் பதியப்பட்டுள்ளது. நிற்க.

ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் கிறித்தவம் ஏற்கப்படுவதற்கு முன்னரே புனித தோமையர் இந்தியா வந்ததாக முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். ராஜேந்திர பிரசாத் கூறியுள்ளார்.

கி.பி. 52ஆம் ஆண்டிலேயே இன்றைய கேரளாவில் உள்ள கொடுங்கல்லூருக்கு வந்து கிறித்துவத்தைப் பரப்பினார் என்றும் கி.பி. 72ல் சென்னை பரங்கிமலையில் கொல்லப்பட்டார் என்றும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. (பரங்கிமலைப் பகுதி அவர் பெயரலாலேயே St. Thomas Mount என்று அழைக்கப் படுவதை நாம் அறிவோம்.)

கிறித்துவுக்கு சுமார் 9 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த இஸ்ரேலிய மன்னர் சாலமன் (பைபிள் குறிப்பிடும் அதே சாலமன்தான்) ஆட்சிக் காலத்தின் போதே யூதர்கள் இன்றைய கேரளாவின் கொச்சியில் வந்திறங்கினர் என்று யூதர்களின் வரலாறுகள் குறிப்பிடுகின்றன.


யூதம் மற்றும் கிறித்தவத்தைப் போலவே இஸ்லாமும் இன்றைய கேரளாவின் வழியே இந்தியாவுக்குள் நுழைந்தது. உமர் (ரளி) அவர்களின் ஆட்சிக் காலத்திலேயே இந்தியாவுக்கு இஸ்லாமிய பிரச்சாரப் பணிக்கு ஆட்களை அனுப்பியதாக தாரீகுத் தப்ரீ எனும் நூலில் பதியப்பட்டுள்ளது. (இந்நூலை எழுதிய அபூ ஜஃபர் முஹம்மத் இப்னு ஜரீர் அத்தப்ரீ கி.பி. 838க்கும் 923க்கும் இடையில் வாழ்ந்தவர்.)

தமிழ் மன்னர்களில் ஒருவராயிருந்த மன்னர் சேரமான் பெருமாள் காலத்திலேயே, நபிகளார் உயிருடன் இருந்த போதே இஸ்லாம் இந்தியாவிற்குள் நுழைந்துவிட்டது என்பதே உண்மை.

சுதீர் பிரோத்கர் எனும் இந்துத்துவ வரலாற்றாசிரியர் கூறுகிறார்:
Many of us do not know that Islam first came into India in the province of Kerala during the lifetime of Prophet Mohammed itself.
This King from Kerala was Cheraman from the Chera dynasty of Kerala. He gave a patient hearing to the discourses of the Messengers of Islam. On hearing them, he was favourably impressed by their message of universal brotherhood which is enshrined in Islamic theology and is recommended to be practiced within the Muslim community. (Ironically this concept is limited to the Muslim community alone, while towards the unbelievers what is advocated is relentless hatred. And in practice even within the Muslim community, in real life, the general attitude is of fanaticism and violence when the energy of the Muslims is not directed towards battling the non-Muslims).

But King Cheraman was favourably impressed with what he was told and he is said to expressed interest in Islam. Local legend says that King Cheraman visited Mecca and converted to Islam in the 7th century. This happened before Islam had become a military force and started off rampaging on its global Jehad. King Cheraman also built a Mosque in Kerala and many local people converted to Islam along with him.

(ஆக ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டுவந்தவர்களைத் தவிர மற்ற) அனைவருமே இந்தியாவின் பூர்வகுடிகளான தமிழர்கள் குடியிருந்த பகுதிகளுக்கே வந்துள்ளனர். ஆனால் இந்தியாவின் வரலாற்றை எழுதிய / எழுதிக் கொண்டிருக்கும் பார்ப்பண வரலாற்றாசிரியர்கள் வடக்கில் நிகழ்ந்தவைகளையே முன்னிலைப் படுத்துகின்றனர். (ஆனந்த விகடனில் பார்ப்பனரான மதன், தமிழர்களுக்கென்று வரலாறு கிடையாதுன்னு சமீபத்தில் சொன்னது, இந்தியாவின் பூர்வகுடிகளான தமிழர்களின் வரலாற்றைத் திட்டமிட்டே திரிக்கும் கும்பலின் சதியின் ஒரு அங்கமே.)

கஜினி முஹம்மது, கோரி முஹம்மது என்ற ஆப்கன் மன்னர்களின் படையெடுப்புக்குப் பின்னரே இஸ்லாம் இந்தியாவுக்குள் நுழைந்தது என்று வரலாற்றுத் திரிப்பில் ஈடுபட்டு அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளனர். தமிழ், தமிழர், தமிழ் மண் இவை இந்தியாவுடன் சேராது என்று இவர்கள் எண்ணுகிறார்களோ?
-- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- --
80களின் இறுதியில் கமலிடம் கேட்கப்பட்ட கேள்வியும் பதிலும்... (தினத்தந்தியில் வாசித்ததாக நினைவு)

நூல்கள் வாசிப்பதில் ஆர்வமுடையவர் நீங்கள். தற்போது எந்தவகையான நூலைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?

மதம் மாறிய ஒருவர் இஸ்லாம் குறித்தும் குர்ஆன் குறித்தும் எழுதியுள்ள நூலைப் படித்துக் கொண்டுள்ளேன்.
-- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- --
வாசிப்பு ஆர்வமுடைய கமல் அவர்களே, இந்தியாவை அறிய அதன் பூர்வகுடிகளான தமிழர்களின் வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள். வடவர்கள் வரலாறு என்று எழுதி வைத்துள்ளவற்றை கண்ணை மூடி ஆதாரமாக ஏற்றுக் கொள்வதை விட்டொழியுங்கள்.

Thursday, January 17, 2008

யூதம் என்றொரு மத்தியகிழக்கு பார்ப்பனீயம் - 2

கடந்த வாரம் "யூதம் என்றொரு மத்திய கிழக்கு பார்ப்பனீயம்" என்றொரு பதிவெழுதியிருந்தேன். அதற்கு பின்னூட்டியிருந்த மஸ்தான் என்பவர், "அனைத்துப் பார்ப்பனரும் இஸ்ரேலின் செயல்களை ஆதரிப்பதில்லை" என்ற கருத்துப்பட எழுதியிருந்தார். நானும் அதனை ஆமோதித்திருந்தேன். அதன் பின் பதிவர் மா.சி. "கரையான் புற்றுக்குள் பாம்பு - இசுரேல்" என்றொரு பதிவெழுதியுள்ளார் . எதிர்பார்த்தது போன்றே பார்ப்பனரில் பலர் இஸ்ரேலுக்கு ஆதரவாகப் பின்னூட்டியுள்ளனர். யூதத்திற்கும் பார்ப்பனீயத்திற்கும் உள்ள தொடர்பை, யூதர்கள் மீதான பார்ப்பனரின் பாசத்தை இது வெளிப்படுத்துவதாகவே நான் கருதுகிறேன்.

மா.சி. பதிவின் பின்னூட்டங்களுக்கு பதில் நீண்டுவிட்டதால் தனிப்பதிவாக இங்கே....

//அரேபிய மண்ணிலிருந்து விரட்டி அடித்து, ஹிட்லர் முடிக்காததை தாங்கள் முடிக்கப்போவதாகக் கொக்கரிக்கும் அரபுகள் "வலி" நிச்சயமாக மனிதர்களைக் கொசுக்களைப் போல் கொன்று குவிக்கும் கம்யூனிச ஆரதவாளருக்குத்தான் புரியும்.// - வஜ்ரா

மா.சி. காந்தியவாதி என்பதுதான் பலருக்கும் தெரிந்தது. கம்யூனிசவாதியான அசுரனை எதிர்த்து அவருடன் விவாதங்களும் செய்துள்ளார். ஆனால் அவரை இவர் கம்யூனிச ஆதரவாளர் என்று கூறுதன் மூலம் இவர் கூற விரும்புவது தெளிவாகிறது. "(தீவிரவாதத்தி்ற்கெதிரான போரில்) எங்களுடன் இணையுங்கள். இல்லையெனில் நீங்கள் எங்களுக்கு எதிரானவர்கள் என்றே கருதப்படுவீர்கள் - 'You are either with us or against us'" என்று புஷ் கூறியது போன்று இவரது வாதமும் அமைகிறது. அமெரிக்காவின் அடாவடிகளை எதிர்ப்போர் அனைவருமே கம்யூனிச ஆதரவாளர்கள் என்று கட்டமைப்பதையே இவர் விரும்புகிறார்.

//பழைய கதையையே பேசினால் எப்படி? பாலஸ்தீனம் என்ற நாடும் தனியாக இருந்ததேல்லை. ஒட்டோமான் துருக்கியின் ஒரு சிறு பிராந்தியம் அது.// - டோண்டு

பாலத்தீன் உதுமானியப் பேரரசின் ஒரு மாநிலமாகவே இருந்து வந்தது. பாலத்தீன் என்ற பெயரிலேயே அந்த மாநிலம் அழைக்கப்பட்டு வந்தது. உதுமானியப் பேரரசிடமிருந்து அதனை ஆங்கிலேயர்கள் கைப்பற்றியபோது, ஆங்கிலேயர்களின் ஆளுமையில் தனி நாடாகவே இருந்தது. பிரித்தானியாவின் வெளியுறவுச் செயலாளர் ஆர்தர் ஜேம்ஸ் பெல்ஃபோர் என்பவர் பிரிட்டனில் வாழ்ந்த யூதர்களின் தலைவருக்கு 1917ல் எழுதிய பெல்ஃபோர் அறிவிக்கை (Belfour Declartion) என்ற பெயரில் அறியப்படும் கடிதத்தில்,

" Dear Lord Rithchild, I have much pleasure in conveying to you, on behalf of His Majesty's Government, the following declaration of sympathy with Jewish Zionist aspirations which has been submitted to, and approved by, the Cabinet. His Majesty's Government view with favour the establishment in Palestine of a national home for the Jewish people, and will use their best endeavours tofacilitate the achievenment of this object, it being clearly understood that nothing shall be done which may prejudice the civil and religious rights of existing non-Jewish communities in Palestine, or the rights and political status enjoyed by Jews in any other country. I should be grateful if you would bring this declaration to the knowledge of the Zionist Federation. Signed: Arthur James Balfour".

"பாலத்தீனத்தில் யூதர்களுக்கென்று தேசிய இல்லம் அமைக்க மாட்சிமை தாங்கிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது....." என்று குறிப்பிடுகிறார்

பாலத்தீனம் என்றொரு நாடு பிரித்தானிய ஆளுமையின் கீழ் இருந்ததை இந்த அறிவிக்கை உறுதிபடுத்திகிறது.

//அதை பிரிட்டன் முறைப்படி ஐ.நா. தீர்மானத்தின்படி இரண்டு பகுதிகளாக்கியது.// - டோண்டு

எந்த முறைப்படி டோண்டு அவர்களே? நீங்கள் குறி்ப்பிடும் அந்த தீர்மானம் நியயமானதே எனக் கொண்டாலும், அந்த தீர்மானத்தின்படி பாலத்தீன் என்னும் நாட்டை இதுவரை அங்கீகரிக்காத அமெரிக்காவையும் இஸ்ரேலையும் என்ன செய்யலாம்? அந்த தீர்மானத்தை ஒருவர்தான் மதிக்க வேண்டுமா? மற்றவர் மதிக்கத் தேவையில்லையா ? பார்ப்பனர் தவறு செய்வதற்கும் மற்றவர் தவறு செய்வதற்கு வித்தியாசம் இருக்கிறது. இருவருக்கும் வெவ்வேறு தண்டனைகள் என்று உங்கள் வேதம் கூறுவது போன்றுதான் உங்கள் வாதமும் இருக்கிறது.

//தங்களுக்கு கொடுத்த பகுதியை வைத்து இஸ்ரேல் ராஜ்ஜியம் செய்ய பாலஸ்தீனியர் அரபுகளின் தூண்டுதலின் பேரில் தங்கள் நிலப்பகுதிகளை ஜோர்டானிடமும் எகிப்திடமும் பறிகொடுத்தனர்.// - டோண்டு

இதற்கு ஏதேனும் ஆதாரம் உங்களிடம் இருக்கிறதா? 1949 ஆம் ஆண்டு இஸ்ரேல் என்ற நாடு உருவாகும்போது இருந்த வரைபடத்தையும் இன்றைய வரைபடத்தையும் பாருங்கள்.

//மேலும் இஸ்ரேல் அமைய சோவியத் யூனியனும் அதன் ஆதரவாளர்கள் கூட வாக்களித்தனர் என்பதையும் சௌகரியமாக மறக்கிறீர்களே. எனது இஸ்ரேல் பற்றிய பதிவுகளை பாருங்கள்.// - டோண்டு

கம்யூனிஸ்டுகள் ஆதரித்தனர் என்பதாலேயே ஒரு செயல் நியாயமாகிவிடுமா?

//சோம்பேறி அரேபியர்களுக்கு வக்காலத்து வாங்குவதை விடுங்கள். நமக்கும் பாகிஸ்தானுக்கும் பிரச்சினை என்றால் அவர்கள் பாகிஸ்தானத்தைத்தான் ஆதரிப்பார்கள்.// - டோண்டு

ஒருவன் சோம்பேறியாக இருக்கிறான் என்பதற்காக அவன் பக்கம் நியாயம் இருந்தாலும் அவனை ஆதரிப்பது தவறாகிவிடுமா? நமக்கும் பாக்கிஸ்தானுக்கும் பிரச்சனை ஏற்படும்போதெல்லாம் பாக்கிஸ்தானையே ஆதரிக்கும் அமெரிக்கா குறித்து என்ன கூறுகிறீர்?

//முஹம்மத் அப்பாஸ், டீ விக்களில், திரையரங்குச் செய்தித் துணுக்குகளில் எல்லாம் வந்து peaceful co-existence என்றும் Two state solution என்றும் பேசினார். ஆனால் அவர் தேர்தலில் நின்று எத்தனை வாக்குகள் பெற்றார்?// - வஜ்ரா

அப்பாஸ் வெற்றி பெற்றால் உடனே பாலத்தீனத்தை அங்கீகரித்துவிடுவது போன்றும், பாலத்தீனப் பகுதிகளில் இஸ்ரேல் தனது ஆக்ரமிப்புகளை விலக்கிக் கொண்டுவிடும் என்பது போன்று இவரது எழுத்துக்கள் உள்ளன. கடந்த தேர்தலில் அப்பாசின் கட்சிதான் வெற்றி பெற்றது. ஏதேனும் மாற்றம் நிகழ்ந்ததா?

சனநாயகம், சனநாயகம் என்று கூப்பாடு போடும் இவர்கள் பாலத்தீன சனங்கள் தேர்ந்தெடுத்தவர்களிடம் ஆட்சியை ஒப்படைக்கத் தயங்குவதேன்? நீங்கள் எதிர்பார்ப்பதெல்லாம் நீங்கள் ஆட்டுவிக்க பாலத்தீன பொம்மை ஒன்று வேண்டும். அவ்வளவுதானே?

//பாலஸ்தீனர்களுக்கு தங்கள் நாடு என்று ஒன்று அமையவேண்டும் என்ற எண்ணம் மிக மிகக் குறைவு.// - வஜ்ரா

பாலத்தீனர்கள் என்று நீங்கள் ஹமாஸ் இயக்கத்தவரை மட்டும்தான் கருதுகிறீர்களா? சுமார் 20 ஆண்டுகளாக நீங்கள் அழைக்கும் இடத்திற்கெல்லாம் வந்து, போட்டோவுக்கு போஸ் கொடுத்து, நீங்கள் சொல்லும் இடங்களிலெல்லாம் கையெழுத்திடும் பாலத்தீன விடுதலை அமைப்பும் அதன் ஆதரவாளர்களும் பாலத்தீனியர்களாக உங்களுக்குத் தெரிவதில்லையா?

//மிக அதிகமாக மேலோங்கியிருக்கும் எண்ணம், யூதர்களை விரட்டுவதில் தான் உள்ளது. அத்தகய எண்ணத்தின் வெளிப்பாடு தான் தற்கொலைப்படைத் தாக்குதல், பொது மக்களை மீது ராக்கெட் தாக்குதல் போன்றவை.// - வஜ்ரா

பாலத்தீனியர் வசிக்கும் குடியிருப்புகளை இடித்துத் தள்ளிவிட்டு எங்கிருந்தோ வரும் யூதர்களுக்கு அந்தப் பகுதிகளில் குடியிருப்புகளை அமைத்துத் தருவீர்கள். குழந்தைகள், பெண்கள் , வயோதிகர் என்று வித்தியாசமின்றி, அமெரிக்கா வழங்கும் ஆயூதங்களைக் கொண்டு கொன்று குவிப்பீர்கள். அதனால் பாதிக்கப்படுவோர், நீங்கள் குறிப்பிடும் இடங்களுக்கு வந்து , கையெழுத்திட்டுவிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது நன்றாகவே புரிகிறது.

//அரபு, இஸ்ரேலியப் பிரச்சனையைப் புரிந்து கொள்ளும் பக்குவம் இந்தியர்களில் வெகு சிலருக்கே முடியும் . அரபு மனப்பான்மையைப் புரிந்தவர்கள் மட்டுமே இஸ்ரேல் பக்கத்து ஞாயத்தைப் பார்க்க முடியும்.//- வஜ்ரா

இந்தியாவின் 2.5 சதவீத மக்களுக்கே புரியும் என்பதெல்லாம் சரிதான். அரபு இஸ்ரேல் பிரச்சனை என்பது வேறு. பாலத்தீன் இஸ்ரேல் பிரச்சனை என்பது வேறு என்பதை நினைவில் கொள்க.

//இஸ்ரேல் செய்யும் செயல்கள் அடாவடிச் செயல்களே, அவர்கள் இப்படிச் செய்யவில்லை என்றால் அவர்களால் அந்த இடத்தில் வாழ முடியாது. பேச்சு வார்த்தை மூலம் பிரச்சனை தீரும் என்றால் அதில் முதலாவதாக வந்து உட்கார்ந்து பேசித் தீர்க்க இஸ்ரேலியர்கள் என்றுமே தயார். ஆனால் இது வரை ஒரு பேச்சு வார்த்தை கூட வெற்றி பெறவில்லை என்பதை ஏன் நீங்கள் யோசிக்கவே இல்லை?// - வஜ்ரா

பாலத்தீனியர்களின் இடங்களையும் கைப்பற்றிக் கொள்வோம். அடாவடியும் செய்வோம். எங்களுடைய அடாவடியைத் தட்டிக் கேட்கக்கூடாது . ஐ.நா. தீர்மானங்களா? ஹ.. அதெல்லாம் எங்களைக் கட்டுப் படுத்தாது. நாங்கள் கூப்பிடும் இடத்திற்கு வந்து நாங்கள் சொல்லும் இடங்களிலெல்லாம் கையெழுத்திட வேண்டும் என்று வலியுறுத்துவோம். ஆனால் உங்கள் கோரிக்கையில் ஒன்றைக்கூட நிறைவேற்ற மாட்டோம் என்று விடாப்பிடியாக நின்றுவிட்டு பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை. அதற்குக் காரணம் பாலத்தீனியரே என்ற உங்கள் வாதத்தின் பின் உள்ள சூழ்ச்சி நன்றாகவே புரிகிறது.

//ஆனால், பாலஸ்தீனர்களுக்கு (ஏன் அனைத்து அரபியர்களுக்குமே) அடிப்படை ஜனனாயகத்தில் நம்பிக்கையோ, எற்றுக்கொள்ளும் மனமுதிற்ச்சியோ இல்லை.// - அதியமான்

சனநாயகம் என்றால் என்ன என்பதை விளக்குவீரா? ( வஜ்ராவுக்கு அளித்த பதிலைப் பார்வையிடவும்)

//மிக முக்கியமாக ஒற்றுமை இல்லை. பாலஸ்தீன குழுக்கலான ஃபாடா வும், ஹமாசும் ஒருவரை ஒருவர் அழிக்க போர் புரிவதை பாருங்கள். அடிப்படை நேர்மையும் இல்லை. யாசர் அராஃபத் பல் மில்லியன் டாலர்களை ஊழ்ல் புரிந்ததாக குற்ச்சாட்டு. அவர் மனைவியும், பி.எல்.ஓ தலைமையும் இந்த பணதிற்க்காக அடித்துக் கொள்ளும் வெக்ககேடு.// - அதியமான்

ஒரு குழுவால் குறிப்பிட்ட நோக்கத்தை அடையமுடியவில்லை . அந்த தலைமையின் முடிவுகளால் நோக்கம் நிறைவேறாமல் போய்விட வாய்ப்பு உண்டு என்று குழும உறுப்பினர்கள் கருதினால் நிச்சயமாக அந்தக் குழுவில் ஒற்றுமை இருக்காது. பிரிவுகள் தோன்றவே செய்யும் . இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறுகள்கூட இதனை தெளிவுபடுத்தவே செய்கின்றன. காந்திஜி அகிம்சை என்றார்; நேதாஜி ஆயுதம் என்றார். "அவருடைய நடவடிக்கை நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தராது" என்பதே இருவரின் ஒரே கருத்து.

//காசா மற்றும் கிழுக்கு கரை பகுதிகளில் (முழு பாலஸ்தீன கட்டுப்பாட்டில் இருப்பவை) நேர்மையான, அடிப்படை ஜனனாயகத்தை மதிக்கும் ஆட்சி கிடையாது. எதிராளிகளை கொல்வதும், துப்பாக்கி கலாச்சாரமும் சர்வ சாதாரணம். அர‌சின் ப‌ண‌த்தை கையாட‌ள் செய்வ‌து, ஊழ்ல் மிக‌ சாதார‌ண‌ம். இவ‌ர்க‌ளால் ஒரு ந‌ல்ல‌ ஆட்சி த‌ர‌ முடியிம் என்று தோன்ற‌வில்லை.// - அதியமான்

பாலத்தீன் என்றொரு நாட்டை இஸ்ரேலும் அமெரிக்காவும் அங்கீகரித்துள்ளனவா? ஒரு நாட்டில் அரசு செயல்படுவதற்குரிய அனைத்து கட்டமைப்புகளையும் ஏற்படுத்திக் கொள்ள அவர்களை அனுமதித்துள்ளீர்களா? எந்தவொரு கட்டமைப்பையும் ஏற்படுதித்க கொடுக்கவில்லை . அவர்கள் தாங்களாகவே ஏற்படுத்திக் கொண்டாலும் அவற்றிற்கு தடை போடப்பட்டது. பாலத்தீன இராணுவம் என்று ஒன்று இல்லை. அப்படி வைத்துக் கொள்ளத் தடை. மிகச் சிறிய அளவில் காவல்துறை உள்ளது. அவர்களிடம் போதுமான ஆயூதங்கள் இல்லை . தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வரும் மக்கள் செய்யும் கிளர்ச்சிகளை மிகச் சிறிய காவல்துறையைக் கொண்டு கட்டுப்படுத்திவிட முடியுமா? அங்கீகரிக்கப் பட்ட பாலத்தீனப் பிரதிநிதியான யாசர் அரபாத் , சொந்த மண்ணில் சொந்த வீட்டில் சிறை வைக்கப் பட்டிருந்ததும் சிறைப் படுத்தியவர்கள் இஸ்ரேலிய இராணுவத்தினர் என்பதும் நினைவிருக்கிறதா மறந்து விட்டதா ?

//அத‌ற்க்கா இஸ்ரேல், பால‌ஸ்தீன‌ விடுதலையை அங்கீகரிக்க கூடாது என்று சொல்லவில்லை. மறுபக்கத்தையும் பாருங்கள்.. // - அதியமான்

பாலத்தீன் இஸ்ரேல் பயங்கரவாதிகளால் அடிமையாக வைக்கப்பட்டுள்ளது என்பதையாவது ஒப்புக் கொண்டீரே. அதற்காக நன்றி .

//அமைதியும், சமாதனாமும் நிரந்தரமாக நிலை பெற்று, பால்ஸ்தீன நாடு ஒழுங்கு பெற்றால், இஸ்ரேலைவிட பேலஸ்தீனரக்ளுக்கே அதிக நன்மையும், வளமும் கிடைக்க வாய்ப்பு. இஸ்ரேலின் சுபிட்சத்திலிருந்து பயன் பெறலாம். (proximity benefits - மெக்ஸிகே, அமேரிக்கா அருகே இருந்து பயன் பெறுவதை போல)// - அதியமான்

பாலத்தீனர்களுக்கு இஸ்ரேலிடமிருந்து நன்மையும் வளமும் கிடைப்பது இருக்கட்டும். முதலில் அவர்களுக்கு விடுதலையை அளிக்க வேண்டாமா? பாலத்தீன் என்றொரு நாடு அமைக்கப்பட்டுவிட்டால் இப்போதுள்ள பிரச்சனைகளில் குறைந்தபட்சம் 50 சதவீதம் குறையுமே ?

//அடாவடி என்பது பார்வையாளர்களின் கோணத்திலிந்துதான்.'அடிக்கு அடி திருப்பி கொடு, இல்லையேல் எதிரிகள் நம்மைவலிமையற்றவனாக நினைத்து மேலும் அடாவடி செய்வர்' என்பதே இஸ்ரேலின் தத்துவம்.// - அதியமான்

இஸ்ரேலுக்கு அந்த தத்துவத்தை இவர்தான் கற்றுக் கொடுத்தார் போலும்.

//1980களுக்கு பின், பெரும்பாலான அரபிய நாடுகள், (ஏன், பி.எல்.ஓ உம்தான்) இஸ்ரேலை முழுவதுமாக அழிக்க வேண்டும் என்ற நிலைபாட்டிலிருந்து மாறி, பாலஸ்தீனர்களுக்கு ஒரு தனி நாடு கிடைத்தால் போதும், இஸ்ரேலுடன் peaceful co-existance என மாறின‌.// - அதியமான்

பாலத்தீனியர்களுக்கு ஒரு நாடு கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு வந்து சுமார் 30 ஆண்டுகளாகியும் அவர்களுக்கு கிடைத்த பலன் என்ன? அன்றைய நிலையிலிருந்து கொஞ்சமேனும் மேம்பாடு அடைந்திருந்தால், ஹமாஸ் போன்ற இயக்கங்கள் தோன்றியிருக்காது. (ஹமாஸ் தொடங்கப்பட்ட ஆண்டு 1987). ஹமாஸின் செயல்பாடுகளில் திருப்தி அடையாதவர்கள் ஹமாஸை விட தீவிரமாக செயல்படும் புதிய இயக்கங்களைத் தோற்றுவித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

//இஸ்ரேல் உருவான வரலாறு இன்று விவாதத்திற்கு தேவையில்லை. நிகழ்காலமும் , எதிகாலமும்தான் விவாதிக்கப்பட வேண்டும்.//- அதியமான்

ஒரு பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றால் அந்தப் பிரச்சனை எப்பொழுது தோன்றியது ? அதன் காரணர்கள் எவர் என்பதையெல்லாம் ஆராய்ந்த பிறகே, நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் குறித்துப் பேசவேண்டும் .

//நம்ம அரை டிக்கட் அழகப்பனை கேளுங்க;அவர் கூட மிக சீரிய ஆராய்ச்சி செய்து, "பெளத்தமும்,பார்ப்பனீயமும்,பிறப்போடு வருபவை;யாரும் தழுவு ஏற்க முடியாது" என்ற உண்மையை கண்டுபிடித்து எழுதுவார்// - பின்னூட்ட பாலா

பார்ப்பனீயத்தை எதிர்த்து, இந்தியாவை தாயகமாகக் கொண்டு தோன்றிய பௌத்தத்தை பார்ப்பனீயத்துடன் தொடர்புபடுத்தும் அளவு நான் முட்டாள் அல்ல. தவிரவும் அம்பேத்கர் சுமார் ஒன்றரை இலட்சம் மக்களுடன் பௌத்தத்தைத் தழுவியதை சரித்திரமும் மறைக்கவில்லை. நானும் மறக்கவில்லை .

//சம்பந்தப்பட்ட பாலஸ்தினியர்கள் மற்றும் இதர அரபிய நாடுகளுமே, இஸ்ரேல் என்ற நாட்டை ஏற்று கொண்டுவிட்டனர். பாலஸ்தீனிய நாட்டிற்கான எல்லைகளை வரைவு செய்வதில்தான் இன்னும் பிரச்சனை....// - அதியமான்

சம்பந்தப்பட்ட பாலத்தீனியர் (அப்பாஸ் குழு ) இஸ்ரேலை ஏற்றுக் கொண்டுவிட்டனர் என்பது உண்மைதான். ஆனால் இஸ்ரேல் பாலத்தீன் எனும் நாட்டை ஏற்றுக் கொண்டுள்ளதா?

இவற்றுக்கெல்லாம் பார்ப்பனர்களுக்கு பதில் தெரியும். ஆனாலும் யூதர்கள் மீதான அவர்களின் பாசம் அவர்களை இவ்வாறு எழுதச் செய்கிறது.

என் முந்தைய பதிவில் கூறியது போன்று, பார்ப்பனர் மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவிற்கு வந்தேறியதாக வரலாற்றாசிரியர் கூறுவர். அவர்கள் இந்தியாவிற்கு வரும் முன்னர் அவர்கள் இஸ்ரவேலர்களில் ஒருவராய் இருந்திருக்க வேண்டும் என்றே நான் கருதுகிறேன். அதனால்தான் என்னவோ பார்ப்பனர்கள் இஸ்ரேலை வலிந்து ஆதரித்து வருகின்றனர் என்ற என் கருத்து மேலும் வலுப்பெறுகிறது.

Sunday, January 06, 2008

யூதம் என்றொரு மத்திய கிழக்கு பார்ப்பனீயம்

உலகின் நீண்ட நெடிய தீர்க்கப்படாத பிரச்சனை பாலத்தீன பிரச்சனையே. இரண்டாம் உலகப் போரில் தங்களுக்கு வெற்றி கிடைக்கக் காரணமாக இருந்தவர்கள் யூதர் என்பதால், அதற்குப் பிரதிபலனாக அவர்களுக்கென்று ஒரு தனி நாட்டை உருவாக்கித் தர பிரிட்டன் ஏகாதிபத்தியம் முடிவு செய்தபோது, அவர்கள் தேர்ந்தெடுத்த இடம் அப்போது யூதர்கள் அதிகமாக இருந்த ஐரோப்பாவின் ஒரு பகுதியையோ அல்லது ஹிட்லரின் ஜெர்மனியையோ அல்ல. மாறாக, மத்திய கிழக்குப் பகுதியை.


யூத மதத்தின் பிறப்பிடம் என்பதற்காக மட்டுமே இந்தப் பகுதியை அவர்கள் தேர்ந்தெடுக்கவில்லை. உலகப் போர்களில் தங்களுக்கு எதிராக நின்ற உதுமானியப் பேரரசைப் பிரித்தாள வேண்டும் என்பதுவும் அவர்களின் நோக்கமாக இருந்தது. இதற்கு வசதியாக ஏற்கனவே யூத அமைப்பு ஒன்று அந்த மண்ணின் மைந்தர்களிடமிருந்து நிலங்களைத் தந்திரமாக கையகப்படுத்திக் கொண்டு இருந்தது. (விரிவாக அறிய : பா. ராகவனின் நிலமெல்லாம் ரத்தம் பார்வையிடவும்)

தங்கள் இடத்தைப் பிடுங்கி அடுத்தவனுக்குக் கொடுப்பதை எந்த மனிதன்தான் ஒப்புக் கொள்வான்? பாலத்தீனியர்களும் அன்று முதல் தங்கள் எதிர்ப்புகளை பலவிதமாக வெளிக்காட்டினர்.

உலகம் முழுவதும் ஜனநாயகத்தையும் சுதந்திரக் காற்றையும் சுவாசிக்க வைக்கப் போவதாக தடி எடுத்திருக்கும் அமெரிக்கதான், பாலத்தீனர்களின் சுதந்திரப் போராட்டங்களை ஒடுக்க இஸ்ரேலுக்கு ஆயுதங்களை விநியோகித்து வருகிறது. பாலத்தீனம் போர்க்கள பூமியாக இருக்கும்வரை, ஆயுத வியாபரிகளின் சந்தையாக மத்தியக் கிழக்கு விளங்கும் என்பதாலேயே பேரழிவு ஆயுத வியாரிகளையே அதிபராகக் கொண்ட அமெரிக்காவும் அதன் எடுபிடியான பிரிட்டனும் இந்தப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவரக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து வருகின்றன. (கடந்த ஆண்டு ஜூலையில் அமெரிக்காவின் ஆயுத விற்பனை அறிவிப்பை பார்வையிடவும்)

எனினும் கண் துடைப்புக்காக பேச்சுவார்தைகளை நடத்திக் கொண்டு வருகின்றனர். ஓஸ்லோ முதல் சமீபத்தைய அண்ணாபோலீஸ் வரை இந்த நாடகங்கள் நடந்தேறி வருகின்றன.

பாலத்தீனர்களின் பிரதிநிதியாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்க அரசு பாலத்தீன விடுதலை அமைப்பை மட்டுமே அங்கீகரித்ததுள்ள நிலையில், அண்ணாபோலீசில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு அந்த அமைப்புக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. மஹ்மூத் அப்பாஸ்தான் இதன் தலைவர் என்றாலும், பாலத்தீன் அதாரிட்டியின் பிரதிநிதி என்ற அளவிலேயே அவர் கலந்து கொள்ள முடியும். இதன் மூலம் எந்த உடன்படிக்கை எட்டப்பட்டாலும் சர்வதேச சட்ட அங்கீகாரம் பெற முடியாது. சர்வதேச சட்ட அங்கீகாரம் இல்லாத ஒரு ஒப்பந்தம் கண் துடைப்பு ஒப்பந்தமாகவே இருக்க முடியும்.

1947 ல் 90 சதவீதமாய் இருந்த பாலத்தீனியர்களின் எண்ணிக்கை 2020ல் 55 சதவீதமாய் சுருங்கிப் போகும் அளவுக்கு பாலத்தீனியர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் பலர் அகதிதகளாய் வெளியேற்றப் பட்டுள்ளனர். யூதர்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளனர்.
உயிர் காக்கும் மருந்துகள் இல்லை ( கடந்த அக்டோபர் மாதம் 61 வகையான முக்கியமான மருந்துகள் பாலத்தீனத்தில் இல்லை என்ற நிலை. நவம்பர் மாதம் இதன் எண்ணிக்கை 91 என்றானது) , அடிப்படைக் கல்வி இல்லை, வேலை வாய்ப்பு இல்லை, தங்கள் சொந்த மண்ணில் தங்களுக்குச் சுதந்திரம் இல்லை. இப்படி தங்களின் அடிப்படை உரிமைகளை இழந்துவிட்ட ஒருவன் அதற்குக் காரணமான ஒருவனை எதிர்த்துப் போராடுவதைத்தான் ஊடக வியாபாரிகள் தீவிரவாதம் என்கின்றனர். நம்மூர் ஊடகங்களும் அதனை அப்படியே வாந்தி எடுக்கின்றன.
ஹமாஸ் போன்ற இயக்கங்களைத்தானே அவர்கள் தீவிரவாதிகள் என்று கூறுகின்றனர். இவர்கள் அமைதி ஒப்பந்தத்திற்கு எதிரானவர்கள்தானே என்ற கேள்வியும் அவ்வப்போது எழுப்பப்படுகிறது. ஹமாஸ் இயக்கம் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளவில்லைதான். அநீதியாக எழுதி வைத்துக் கொண்டு, இதுதான் அமைதி ஒப்பந்தம் என்றால் யார்தான் ஏற்றுக் கொள்வார்கள்? அநீதியாக இருந்தாலும் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்ட யாசிர் அரஃபாத்தை இவர்கள் எப்படி நடத்தினார்கள், எத்தனை முறை அவரை வீட்டுச்சிறை வைத்தனர். மருத்துவத்திற்காகக் கூட வெளிநாடு செல்ல பல தடைகளை ஏற்படுத்தினர் என்பதை ஏனோ இவர்கள் சிந்திக்க மறுக்கின்றனர்.

அதுமட்டுமின்றி, பாலத்தீனத்தை தனிநாடாக இதுவரை இஸ்ரேலோ அமெரிக்காவோ அங்கீகரிக்கவில்லை. பாலத்தீன அதிபர் என்று பாலத்தீன விடுதலை அமைப்பின் தலைவரை வளைகுடாவின் ஊடகங்களும் இந்திய ஊடகங்களும் புழங்கினாலும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஊடகங்கள், ஆட்சியாளர்கள் பாலத்தீன் அதாரிட்டியின் தலைவர் என்றே புழங்குகின்றனர். இந்த அத்தாரிட்டி சிறிய அளவில் காவல்காரர்களை ஏற்பாடு செய்து கொள்ளலாம். இராணுவம் போன்று ஆயுதங்களை வைத்துக் கொள்ள முடியாது. அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்ட இடத்தில் நிகழும் கலவரங்களை ஒடுக்கி அமைதியை ஏற்படுத்த வேண்டும், யூதர் மற்றும் இஸ்ரேலிய இராணுவத்திற்கெதிரான தாக்குதல்களை சிறிய அளவிலான காவல்காரர்களைக் கொண்டு நிறுத்த வேண்டும் என்பதுதான் இந்த பாலத்தீன அதாரிட்டியின் முழுமுதற்கடமை.

ஆனால், இதுவரை கலவரக்காரர்களை ஒடுக்க முடியவில்லை. எனவே பாலத்தீனர்களுக்கு தங்களுடைய நாட்டை ஆளும் தகுதி இல்லை என்கிறார் டோணி பிளேயர்.

இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்திற்கு இடையே தீர்க்கமுடியாத பிரச்சனையாக இருப்பது பாலத்தீனம் எனும் தனி நாடு அமைவது இல்லை; மாறாக அந்த நாட்டை ஆளும் தகுதியுடையவர்களாக பாலத்தீனியர்கள் இருப்பார்களா என்பதுதான். இந்த இருநாடுகளும் இருக்க வேண்டுமானால் முதலில் இஸ்ரேலின் பாதுகாப்புக்கு முழு உத்தரவாதம் அளிக்க வேண்டும் . .... என்று அவர் கூறுகிறார்.
"இஸ்ரேலின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்" என்று கூறுபவர்கள் அந்த உத்தரவாதத்தை எவரிடம் கேட்கின்றனர்? உத்தரவாதம் கொடுக்கக் கூடிய சக்தி அவர்களிடம் இருக்கிறதா? செல்வந்தர் ஒருவரின் கடனுக்கு ஏழையிடம் உத்தரவாதம் கேட்பது போல் இருக்கின்றது இவரின் இந்த வாதம்.

ஒரு அரசு செயல்படுவதற்குரிய அடிப்படை வசதிகள் எதனையுமே வழங்காமல் அல்லது தாங்களாகவே அவர்கள் ஏற்படுத்திக் கொள்ள முனையும்போதெல்லாம் அவற்றிக்கு தடைபோட்டுவிட்டு இவர்கள் நாட்டை ஆளும் தகுதி உள்ளவர்களா? என்று கேட்பது இவர்களின் மனவக்கிரத்தையே காட்டுகிறது.
அமெரிக்கா வழங்கும் நவீன ஆயுதங்களை எதிர்த்து, தங்களுக்கு அதுபோன்ற வெளநாட்டு உதவிகளோ, பண வசதியோ இன்றி தங்கள் சொந்த நாட்டிலேயே தங்களுடைய அறிவையும் மிகவும் குறைவான செல்வத்தையும் பயன்படுத்தி ஆயுதங்களை உருவாக்கியும், சில போது இயற்கை வழங்கிய கல் போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தியும் வருகின்ற இந்தப் போராளிகளைப் பார்த்துத்தான் தகுதியற்றவர்கள் என்று கூறுகின்றனர்.

பாலத்தீன மக்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கி, அநீதிகளையே அமைதி ஒப்பந்தம் என்று ஏற்கச்சொல்லி, மறுத்தால் தீவிரவாதி என்றெல்லாம் ஏகடியம் பேசி வல்லான் வகுத்ததே சட்டம் என்று ஏகாதிபத்திய வெறியை தீர்த்துக் கொள்ளும் மேற்கத்திய, யூதர்களைப் போன்றே நம்நாட்டிலும் வல்லாதிக்க வெறிகொண்ட பார்ப்பன சித்தாந்த எதிரிகளுக்கு அல்லது அவர்களைவிட எளியோருக்கான அத்தனை வாய்ப்புகளையும் மறுத்துவிட்டு/ மறைத்துவிட்டு திறமை இல்லை; அதனால்தான் பின்தங்கியுள்ளனர் என்று கூறுவர்.

சுதந்திரத்திற்கு முன் ஐயாயிரம் ஆண்டுகளாகவும் சுதந்திரத்திற்குப் பின் அறுபது ஆண்டுகளாகவும் சுரண்டிக் கொண்டிருக்கும் இவர்கள், மற்றவர்களின் முன்னேற்றத்திற்கு எதிராக பல்வேறு சூழ்ச்சிகளைச் செய்து வருகிறார்கள்.

என்னே ஒற்றுமை! பார்ப்பனர் மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவிற்கு வந்தேறியதாக வரலாற்றாசிரியர் கூறுவர். அவர்கள் இந்தியாவிற்கு வரும் முன்னர் அவர்கள் இஸ்ரவேலர்களில் ஒருவராய் இருந்திருக்க வேண்டும் என்றே நான் கருதுகிறேன். அதனால்தான் என்னவோ பார்ப்பனர்கள் இஸ்ரேலை வலிந்து ஆதரித்து வருகின்றனர்.

Wednesday, November 29, 2006

முல்லைப் பெரியாறு - ஒரு கேரளீய பார்வை

சமீப நாட்களாக ஒரு நாளைக்கு பல முறை "முல்லைப் பெரியாறு" என்ற பெயர் காதில் பட, அது என்னதான் பிரச்சனை? கேரளம் ஏன் எதிர்க்கிறது? என்பதை அறிய முற்பட்டு "மாத்யமம்" என்ற மலையாள நாளிதழில் நவம்பவர் 27ஆம் இடம்பெற்ற ஒரு கட்டுரையிலிருந்து சில பகுதிகள்...

144 ஆண்டுகளுக்கு முன்பு (1862ல்) இங்கு ஒரு அணை கட்ட வேண்டும் என்று பிரிட்டீசாரின் பிரதிநிதியாகிய மதராஸ் ஆளுநர் திருவிதாங்கூர் அரசரிடம் கோரிய போது, அதற்கு மறுப்பு தெரிவிக்க இயலாத நிலையில் இருந்த அரசர் சுமார் 25 ஆண்டுகள் சம்மதம் தெரிவிக்காமலேயே தள்ளிப்போட்டார். அதற்கு மேலும் அவரால் சமாளிக்க முடியாமல் 1886 ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் நாள் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அரசர் இவ்வாறு கூறினார். 'என்னுடைய இதயத்தில் ஓடுகின்ற இரத்தத்தில் நுழைத்துதான் இதனை நான் செய்கிறேன்'.

ஆனால், மக்களாட்சியில் சிறந்த ஆட்சியாளர்கள் என்று நாம் கருதுபவர்கள் ஆட்சி செய்த போது, 1970 மே 29ஆம் நாள் நம்முடைய அரசு கையெழுத்திட்ட ஒப்பந்தம் முன் யோசனை இல்லாத நம் செயல்பாட்டை உணர்த்துகிறது. உலகம் முழுவதும் அணைகளைக் குறித்த அறிவும் அனுபவங்களும் நம் முன்பாக இருந்தும் நாம் இதனை செய்தோம். 1956ஆம் ஆண்டு மாநில புணர்நிர்மான சபை ஏற்படுத்தப்பட்டபோது, மாநிலங்களுக்கிடையே ஏற்கனவே இருக்கின்ற ஒப்பந்தங்கள் புதுப்பிப்பதற்கும் நீக்குவதற்கும் வாய்ப்பு இருந்தபோது நாம் அதனை செய்யவில்லை. ஒரு அணை 999 வருடங்கள் நீடித்திருக்காது என்பதைக்கூட அறியாதவர்களாக நம்முடைய ஆட்சியாளர்கள் இருந்திருக்கிறார்கள்?

பாதுகாப்புதான் இன்றைய முக்கிய பிரச்சனை. 136 அடிக்குமேல் நீர் தேக்கினால் பிரச்சனை என்ற ரீதியில் நடக்கின்ற பிரச்சாரம் தவறானதாகும். நூறு ஆண்டுகளுக்கு முந்தைய அணையில் நீர் தேக்குவது உலகில் நான்கு அணைகளில் மட்டுமே. இதில் மற்ற மூன்று அணைகளிலும் டீகமிஷன் செய்யப்பட்டுவிட்டது. இவற்றில் பாதி அளவுக்கு மட்டுமே நீர் தேக்கப்படுகிறது. இதில் நான்காவதாக உள்ளதுதான் முல்லைப் பெரியாறு.

ரிக்டர் அளவுகோலில் 4-5 அளவு பூகம்பம் ஏற்பட சாத்தியமுள்ள இடுக்கியில்தான் இது உள்ளது. பூகம்பம் ஏற்பட்டால் நீரின் அளவு குறைவாக இருந்தாலும் அணை உடையும். இடுக்கியில் மூன்றில் ஒரு பங்கு இருக்கும் முல்லைப் பெரியாறின் நீர் முழுவதும் 3 - 3.30 மணி நேரத்தில் வெளியாகி, இதன் மூலம் இடுக்கியின் மற்ற மூன்று அணைகளில் ஒன்றை அது தகர்க்கும். இது லோவர் பெரியாறு, பூதத்தான் அணை போன்றவற்றையும் தகர்த்து நான்கு மாவட்டங்களில் பிரளயத்தை உண்டாக்கும். முல்லைப் பெரியாறில் 130 அடி நீர் இருந்தாலும் இப்படி நடக்க வாய்ப்பு உண்டு என்பதுதான் உண்மை.

இப்பிரச்சனையில் அனைவரும் ஏற்கக்கூடிய வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் மூலம் பரிசோதனை செய்வதுடன், இத்தகைய அசம்பாவிதம் ஏற்பட்டால் அதனை எதிர் கொள்ள டிசாஸ்டர் மேனேஜ்மென்ட் பிளானும் தீட்ட வேண்டும். இதற்காக உலக அணை கமிஷன், ஐக்கிய நாடுகள் சபை போன்றவற்றின் உதவியை நாடலாம். எந்த வெளிநாட்டு நிறுவனம் பரிசோதனை செய்தாலும் முல்லைப் பெரியாறில் 75 முதல் 80 அடிக்கு மேல் நீர் தேக்கக் கூடாது என்றே கூறுவர்.

இதற்கு அவசியமில்லை; உச்ச நீதிமன்றம் எல்லாவித சோதனைகளையும் செய்தபின்னர்தான் தீர்பபு கூறியுள்ளது என்று தமிழ்நாடு வாதிக்குமானால், கேரள அரசு அதனை அங்கீகரிக்க வேண்டியதில்லை. மக்களின் உயிர் மற்றும் உடைமை குறித்த அச்சத்தை தீர்க்கும் பொறுப்பு கேரள அரசுக்கு உள்ளது. எனவே கேரள அரசு வேறு ஒரு கோரிக்கையை வைக்க வேண்டும். இந்த அணை உடைந்தால் ஏற்படுகின்ற அனைத்து சேதங்களுக்கும் தமிழ்நாடு பொறுப்பேற்பேற்று அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு எழுதிக் கொடுக்க வேண்டும்.

மனித உயிரின் விலையை நிர்ணயிக்க இயலாது என்றாலும் ஒரு காப்பீட்டு நிறுவனம் மனித உயிருக்கு அளிக்கும் மரியாதையையாவது தமிழ்நாடு அளிக்க வேண்டும். மரணம் அடையும் ஒவ்வொரு உயிருக்கும் 5 கோடியும், சொத்துகளுக்கு ஏற்படும் சேதங்களுக்கு அவற்றின் மதிப்பிற்கேற்பவும் நட்ட ஈடு அளிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.

---
இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் உண்மையாக இருப்பின் கேரளாவின் அச்சமும், எதிர்ப்பும் சரி என்றே படுகிறது. பிரச்சனை வந்தபின் செயல்படுவதைவிட வருமுன் செயல்படுவதே நல்லது.

Tuesday, November 14, 2006

அல்ஜஸீரா ஆங்கிலம்

தொடங்கப்பட்ட நாள் முதல் அரபுலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திக் கொண்டுவரும் அல்ஜஸீரா தொலைக்காட்சி, மத்திய கிழக்கு நாடுகளின் அரசுகள் மற்றும் மக்களால் தவிர்க்க முடியாத ஊடகமாக அன்று முதல் திகழ்ந்து வருகிறது.

1996ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தோஹா - கத்தரில் தொடங்கப்பட்ட இத்தொலைக் காட்சி, அரசியல் குறுக்கீடுகள் இன்றி செயல்பட்டு வருகிறது.

இந்த நூற்றாண்டின் முதல் இரண்டு போர்களான ஆப்கன் மீதான தாக்குதலையும், இராக் மீதான தாக்குதலையும் உலகம் பார்த்தது அல்ஜஸீரா மூலமே. அமெரிக்க மற்றும் பிரித்தானிய கூட்டுப் படைகளின் களவானித் தனத்தையும், பொதுமக்கள் அடைந்த பாதிப்புகளையும் அல்ஜஸீரா வெளிச்சம் போட்டுக் காட்டியது. இதனால் சினமுற்ற அமெரிக்கா அல்ஜஸீரா நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று கோரியதாக தகவல்கள் வெளியானது.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த அல்ஜஸீரா, ஆங்கில ஒளிபரப்புச் சேவையை நாளை (15-11-2006) முதல் தொடங்குகிறது. தோஹா, கோலாலம்பூர், லண்டன் மற்றும் வாஷிங்டன் ஆகிய நகரங்களில் ஒளிபரப்பு மையங்களை இதற்காக ஏற்படுத்தியுள்ளது.

பி.பி.சி. மற்றும் சி.என்.என். போன்ற மேற்கத்திய ஊடகங்களின் தரத்திற்கு சற்றும் குறைவில்லாத அல்ஜஸீரா, ஆங்கிலத்தில் கால்பதிப்பது மேற்கத்திய ஊடகங்களுக்கம் ஆட்சியாளர்களுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

பி.பி்.சி., சி.என்.என். போன்ற நிறுவனங்களில் பணிபுரிந்த சிலரும் அல்ஜஸீராவில் இணைந்துள்ளனர்.

அல்ஜஸீரா என்றுமே அரசுகளின் ஊடகமாக இருந்ததில்லை; அது மக்களின் ஊடகமாகவே இருந்துள்ளது என்பதற்கு அது சந்தித்து வரும் தாக்குதல்களே ஆதாரமாகும்.

செய்திகளை மேற்கிலிருந்து பார்த்து வந்த உலகம், இனி மத்திய கிழக்கிலிருந்தும் பார்க்கும் என்பது திண்ணம்.