Thursday, January 17, 2008

யூதம் என்றொரு மத்தியகிழக்கு பார்ப்பனீயம் - 2

கடந்த வாரம் "யூதம் என்றொரு மத்திய கிழக்கு பார்ப்பனீயம்" என்றொரு பதிவெழுதியிருந்தேன். அதற்கு பின்னூட்டியிருந்த மஸ்தான் என்பவர், "அனைத்துப் பார்ப்பனரும் இஸ்ரேலின் செயல்களை ஆதரிப்பதில்லை" என்ற கருத்துப்பட எழுதியிருந்தார். நானும் அதனை ஆமோதித்திருந்தேன். அதன் பின் பதிவர் மா.சி. "கரையான் புற்றுக்குள் பாம்பு - இசுரேல்" என்றொரு பதிவெழுதியுள்ளார் . எதிர்பார்த்தது போன்றே பார்ப்பனரில் பலர் இஸ்ரேலுக்கு ஆதரவாகப் பின்னூட்டியுள்ளனர். யூதத்திற்கும் பார்ப்பனீயத்திற்கும் உள்ள தொடர்பை, யூதர்கள் மீதான பார்ப்பனரின் பாசத்தை இது வெளிப்படுத்துவதாகவே நான் கருதுகிறேன்.

மா.சி. பதிவின் பின்னூட்டங்களுக்கு பதில் நீண்டுவிட்டதால் தனிப்பதிவாக இங்கே....

//அரேபிய மண்ணிலிருந்து விரட்டி அடித்து, ஹிட்லர் முடிக்காததை தாங்கள் முடிக்கப்போவதாகக் கொக்கரிக்கும் அரபுகள் "வலி" நிச்சயமாக மனிதர்களைக் கொசுக்களைப் போல் கொன்று குவிக்கும் கம்யூனிச ஆரதவாளருக்குத்தான் புரியும்.// - வஜ்ரா

மா.சி. காந்தியவாதி என்பதுதான் பலருக்கும் தெரிந்தது. கம்யூனிசவாதியான அசுரனை எதிர்த்து அவருடன் விவாதங்களும் செய்துள்ளார். ஆனால் அவரை இவர் கம்யூனிச ஆதரவாளர் என்று கூறுதன் மூலம் இவர் கூற விரும்புவது தெளிவாகிறது. "(தீவிரவாதத்தி்ற்கெதிரான போரில்) எங்களுடன் இணையுங்கள். இல்லையெனில் நீங்கள் எங்களுக்கு எதிரானவர்கள் என்றே கருதப்படுவீர்கள் - 'You are either with us or against us'" என்று புஷ் கூறியது போன்று இவரது வாதமும் அமைகிறது. அமெரிக்காவின் அடாவடிகளை எதிர்ப்போர் அனைவருமே கம்யூனிச ஆதரவாளர்கள் என்று கட்டமைப்பதையே இவர் விரும்புகிறார்.

//பழைய கதையையே பேசினால் எப்படி? பாலஸ்தீனம் என்ற நாடும் தனியாக இருந்ததேல்லை. ஒட்டோமான் துருக்கியின் ஒரு சிறு பிராந்தியம் அது.// - டோண்டு

பாலத்தீன் உதுமானியப் பேரரசின் ஒரு மாநிலமாகவே இருந்து வந்தது. பாலத்தீன் என்ற பெயரிலேயே அந்த மாநிலம் அழைக்கப்பட்டு வந்தது. உதுமானியப் பேரரசிடமிருந்து அதனை ஆங்கிலேயர்கள் கைப்பற்றியபோது, ஆங்கிலேயர்களின் ஆளுமையில் தனி நாடாகவே இருந்தது. பிரித்தானியாவின் வெளியுறவுச் செயலாளர் ஆர்தர் ஜேம்ஸ் பெல்ஃபோர் என்பவர் பிரிட்டனில் வாழ்ந்த யூதர்களின் தலைவருக்கு 1917ல் எழுதிய பெல்ஃபோர் அறிவிக்கை (Belfour Declartion) என்ற பெயரில் அறியப்படும் கடிதத்தில்,

" Dear Lord Rithchild, I have much pleasure in conveying to you, on behalf of His Majesty's Government, the following declaration of sympathy with Jewish Zionist aspirations which has been submitted to, and approved by, the Cabinet. His Majesty's Government view with favour the establishment in Palestine of a national home for the Jewish people, and will use their best endeavours tofacilitate the achievenment of this object, it being clearly understood that nothing shall be done which may prejudice the civil and religious rights of existing non-Jewish communities in Palestine, or the rights and political status enjoyed by Jews in any other country. I should be grateful if you would bring this declaration to the knowledge of the Zionist Federation. Signed: Arthur James Balfour".

"பாலத்தீனத்தில் யூதர்களுக்கென்று தேசிய இல்லம் அமைக்க மாட்சிமை தாங்கிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது....." என்று குறிப்பிடுகிறார்

பாலத்தீனம் என்றொரு நாடு பிரித்தானிய ஆளுமையின் கீழ் இருந்ததை இந்த அறிவிக்கை உறுதிபடுத்திகிறது.

//அதை பிரிட்டன் முறைப்படி ஐ.நா. தீர்மானத்தின்படி இரண்டு பகுதிகளாக்கியது.// - டோண்டு

எந்த முறைப்படி டோண்டு அவர்களே? நீங்கள் குறி்ப்பிடும் அந்த தீர்மானம் நியயமானதே எனக் கொண்டாலும், அந்த தீர்மானத்தின்படி பாலத்தீன் என்னும் நாட்டை இதுவரை அங்கீகரிக்காத அமெரிக்காவையும் இஸ்ரேலையும் என்ன செய்யலாம்? அந்த தீர்மானத்தை ஒருவர்தான் மதிக்க வேண்டுமா? மற்றவர் மதிக்கத் தேவையில்லையா ? பார்ப்பனர் தவறு செய்வதற்கும் மற்றவர் தவறு செய்வதற்கு வித்தியாசம் இருக்கிறது. இருவருக்கும் வெவ்வேறு தண்டனைகள் என்று உங்கள் வேதம் கூறுவது போன்றுதான் உங்கள் வாதமும் இருக்கிறது.

//தங்களுக்கு கொடுத்த பகுதியை வைத்து இஸ்ரேல் ராஜ்ஜியம் செய்ய பாலஸ்தீனியர் அரபுகளின் தூண்டுதலின் பேரில் தங்கள் நிலப்பகுதிகளை ஜோர்டானிடமும் எகிப்திடமும் பறிகொடுத்தனர்.// - டோண்டு

இதற்கு ஏதேனும் ஆதாரம் உங்களிடம் இருக்கிறதா? 1949 ஆம் ஆண்டு இஸ்ரேல் என்ற நாடு உருவாகும்போது இருந்த வரைபடத்தையும் இன்றைய வரைபடத்தையும் பாருங்கள்.

//மேலும் இஸ்ரேல் அமைய சோவியத் யூனியனும் அதன் ஆதரவாளர்கள் கூட வாக்களித்தனர் என்பதையும் சௌகரியமாக மறக்கிறீர்களே. எனது இஸ்ரேல் பற்றிய பதிவுகளை பாருங்கள்.// - டோண்டு

கம்யூனிஸ்டுகள் ஆதரித்தனர் என்பதாலேயே ஒரு செயல் நியாயமாகிவிடுமா?

//சோம்பேறி அரேபியர்களுக்கு வக்காலத்து வாங்குவதை விடுங்கள். நமக்கும் பாகிஸ்தானுக்கும் பிரச்சினை என்றால் அவர்கள் பாகிஸ்தானத்தைத்தான் ஆதரிப்பார்கள்.// - டோண்டு

ஒருவன் சோம்பேறியாக இருக்கிறான் என்பதற்காக அவன் பக்கம் நியாயம் இருந்தாலும் அவனை ஆதரிப்பது தவறாகிவிடுமா? நமக்கும் பாக்கிஸ்தானுக்கும் பிரச்சனை ஏற்படும்போதெல்லாம் பாக்கிஸ்தானையே ஆதரிக்கும் அமெரிக்கா குறித்து என்ன கூறுகிறீர்?

//முஹம்மத் அப்பாஸ், டீ விக்களில், திரையரங்குச் செய்தித் துணுக்குகளில் எல்லாம் வந்து peaceful co-existence என்றும் Two state solution என்றும் பேசினார். ஆனால் அவர் தேர்தலில் நின்று எத்தனை வாக்குகள் பெற்றார்?// - வஜ்ரா

அப்பாஸ் வெற்றி பெற்றால் உடனே பாலத்தீனத்தை அங்கீகரித்துவிடுவது போன்றும், பாலத்தீனப் பகுதிகளில் இஸ்ரேல் தனது ஆக்ரமிப்புகளை விலக்கிக் கொண்டுவிடும் என்பது போன்று இவரது எழுத்துக்கள் உள்ளன. கடந்த தேர்தலில் அப்பாசின் கட்சிதான் வெற்றி பெற்றது. ஏதேனும் மாற்றம் நிகழ்ந்ததா?

சனநாயகம், சனநாயகம் என்று கூப்பாடு போடும் இவர்கள் பாலத்தீன சனங்கள் தேர்ந்தெடுத்தவர்களிடம் ஆட்சியை ஒப்படைக்கத் தயங்குவதேன்? நீங்கள் எதிர்பார்ப்பதெல்லாம் நீங்கள் ஆட்டுவிக்க பாலத்தீன பொம்மை ஒன்று வேண்டும். அவ்வளவுதானே?

//பாலஸ்தீனர்களுக்கு தங்கள் நாடு என்று ஒன்று அமையவேண்டும் என்ற எண்ணம் மிக மிகக் குறைவு.// - வஜ்ரா

பாலத்தீனர்கள் என்று நீங்கள் ஹமாஸ் இயக்கத்தவரை மட்டும்தான் கருதுகிறீர்களா? சுமார் 20 ஆண்டுகளாக நீங்கள் அழைக்கும் இடத்திற்கெல்லாம் வந்து, போட்டோவுக்கு போஸ் கொடுத்து, நீங்கள் சொல்லும் இடங்களிலெல்லாம் கையெழுத்திடும் பாலத்தீன விடுதலை அமைப்பும் அதன் ஆதரவாளர்களும் பாலத்தீனியர்களாக உங்களுக்குத் தெரிவதில்லையா?

//மிக அதிகமாக மேலோங்கியிருக்கும் எண்ணம், யூதர்களை விரட்டுவதில் தான் உள்ளது. அத்தகய எண்ணத்தின் வெளிப்பாடு தான் தற்கொலைப்படைத் தாக்குதல், பொது மக்களை மீது ராக்கெட் தாக்குதல் போன்றவை.// - வஜ்ரா

பாலத்தீனியர் வசிக்கும் குடியிருப்புகளை இடித்துத் தள்ளிவிட்டு எங்கிருந்தோ வரும் யூதர்களுக்கு அந்தப் பகுதிகளில் குடியிருப்புகளை அமைத்துத் தருவீர்கள். குழந்தைகள், பெண்கள் , வயோதிகர் என்று வித்தியாசமின்றி, அமெரிக்கா வழங்கும் ஆயூதங்களைக் கொண்டு கொன்று குவிப்பீர்கள். அதனால் பாதிக்கப்படுவோர், நீங்கள் குறிப்பிடும் இடங்களுக்கு வந்து , கையெழுத்திட்டுவிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது நன்றாகவே புரிகிறது.

//அரபு, இஸ்ரேலியப் பிரச்சனையைப் புரிந்து கொள்ளும் பக்குவம் இந்தியர்களில் வெகு சிலருக்கே முடியும் . அரபு மனப்பான்மையைப் புரிந்தவர்கள் மட்டுமே இஸ்ரேல் பக்கத்து ஞாயத்தைப் பார்க்க முடியும்.//- வஜ்ரா

இந்தியாவின் 2.5 சதவீத மக்களுக்கே புரியும் என்பதெல்லாம் சரிதான். அரபு இஸ்ரேல் பிரச்சனை என்பது வேறு. பாலத்தீன் இஸ்ரேல் பிரச்சனை என்பது வேறு என்பதை நினைவில் கொள்க.

//இஸ்ரேல் செய்யும் செயல்கள் அடாவடிச் செயல்களே, அவர்கள் இப்படிச் செய்யவில்லை என்றால் அவர்களால் அந்த இடத்தில் வாழ முடியாது. பேச்சு வார்த்தை மூலம் பிரச்சனை தீரும் என்றால் அதில் முதலாவதாக வந்து உட்கார்ந்து பேசித் தீர்க்க இஸ்ரேலியர்கள் என்றுமே தயார். ஆனால் இது வரை ஒரு பேச்சு வார்த்தை கூட வெற்றி பெறவில்லை என்பதை ஏன் நீங்கள் யோசிக்கவே இல்லை?// - வஜ்ரா

பாலத்தீனியர்களின் இடங்களையும் கைப்பற்றிக் கொள்வோம். அடாவடியும் செய்வோம். எங்களுடைய அடாவடியைத் தட்டிக் கேட்கக்கூடாது . ஐ.நா. தீர்மானங்களா? ஹ.. அதெல்லாம் எங்களைக் கட்டுப் படுத்தாது. நாங்கள் கூப்பிடும் இடத்திற்கு வந்து நாங்கள் சொல்லும் இடங்களிலெல்லாம் கையெழுத்திட வேண்டும் என்று வலியுறுத்துவோம். ஆனால் உங்கள் கோரிக்கையில் ஒன்றைக்கூட நிறைவேற்ற மாட்டோம் என்று விடாப்பிடியாக நின்றுவிட்டு பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை. அதற்குக் காரணம் பாலத்தீனியரே என்ற உங்கள் வாதத்தின் பின் உள்ள சூழ்ச்சி நன்றாகவே புரிகிறது.

//ஆனால், பாலஸ்தீனர்களுக்கு (ஏன் அனைத்து அரபியர்களுக்குமே) அடிப்படை ஜனனாயகத்தில் நம்பிக்கையோ, எற்றுக்கொள்ளும் மனமுதிற்ச்சியோ இல்லை.// - அதியமான்

சனநாயகம் என்றால் என்ன என்பதை விளக்குவீரா? ( வஜ்ராவுக்கு அளித்த பதிலைப் பார்வையிடவும்)

//மிக முக்கியமாக ஒற்றுமை இல்லை. பாலஸ்தீன குழுக்கலான ஃபாடா வும், ஹமாசும் ஒருவரை ஒருவர் அழிக்க போர் புரிவதை பாருங்கள். அடிப்படை நேர்மையும் இல்லை. யாசர் அராஃபத் பல் மில்லியன் டாலர்களை ஊழ்ல் புரிந்ததாக குற்ச்சாட்டு. அவர் மனைவியும், பி.எல்.ஓ தலைமையும் இந்த பணதிற்க்காக அடித்துக் கொள்ளும் வெக்ககேடு.// - அதியமான்

ஒரு குழுவால் குறிப்பிட்ட நோக்கத்தை அடையமுடியவில்லை . அந்த தலைமையின் முடிவுகளால் நோக்கம் நிறைவேறாமல் போய்விட வாய்ப்பு உண்டு என்று குழும உறுப்பினர்கள் கருதினால் நிச்சயமாக அந்தக் குழுவில் ஒற்றுமை இருக்காது. பிரிவுகள் தோன்றவே செய்யும் . இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறுகள்கூட இதனை தெளிவுபடுத்தவே செய்கின்றன. காந்திஜி அகிம்சை என்றார்; நேதாஜி ஆயுதம் என்றார். "அவருடைய நடவடிக்கை நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தராது" என்பதே இருவரின் ஒரே கருத்து.

//காசா மற்றும் கிழுக்கு கரை பகுதிகளில் (முழு பாலஸ்தீன கட்டுப்பாட்டில் இருப்பவை) நேர்மையான, அடிப்படை ஜனனாயகத்தை மதிக்கும் ஆட்சி கிடையாது. எதிராளிகளை கொல்வதும், துப்பாக்கி கலாச்சாரமும் சர்வ சாதாரணம். அர‌சின் ப‌ண‌த்தை கையாட‌ள் செய்வ‌து, ஊழ்ல் மிக‌ சாதார‌ண‌ம். இவ‌ர்க‌ளால் ஒரு ந‌ல்ல‌ ஆட்சி த‌ர‌ முடியிம் என்று தோன்ற‌வில்லை.// - அதியமான்

பாலத்தீன் என்றொரு நாட்டை இஸ்ரேலும் அமெரிக்காவும் அங்கீகரித்துள்ளனவா? ஒரு நாட்டில் அரசு செயல்படுவதற்குரிய அனைத்து கட்டமைப்புகளையும் ஏற்படுத்திக் கொள்ள அவர்களை அனுமதித்துள்ளீர்களா? எந்தவொரு கட்டமைப்பையும் ஏற்படுதித்க கொடுக்கவில்லை . அவர்கள் தாங்களாகவே ஏற்படுத்திக் கொண்டாலும் அவற்றிற்கு தடை போடப்பட்டது. பாலத்தீன இராணுவம் என்று ஒன்று இல்லை. அப்படி வைத்துக் கொள்ளத் தடை. மிகச் சிறிய அளவில் காவல்துறை உள்ளது. அவர்களிடம் போதுமான ஆயூதங்கள் இல்லை . தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வரும் மக்கள் செய்யும் கிளர்ச்சிகளை மிகச் சிறிய காவல்துறையைக் கொண்டு கட்டுப்படுத்திவிட முடியுமா? அங்கீகரிக்கப் பட்ட பாலத்தீனப் பிரதிநிதியான யாசர் அரபாத் , சொந்த மண்ணில் சொந்த வீட்டில் சிறை வைக்கப் பட்டிருந்ததும் சிறைப் படுத்தியவர்கள் இஸ்ரேலிய இராணுவத்தினர் என்பதும் நினைவிருக்கிறதா மறந்து விட்டதா ?

//அத‌ற்க்கா இஸ்ரேல், பால‌ஸ்தீன‌ விடுதலையை அங்கீகரிக்க கூடாது என்று சொல்லவில்லை. மறுபக்கத்தையும் பாருங்கள்.. // - அதியமான்

பாலத்தீன் இஸ்ரேல் பயங்கரவாதிகளால் அடிமையாக வைக்கப்பட்டுள்ளது என்பதையாவது ஒப்புக் கொண்டீரே. அதற்காக நன்றி .

//அமைதியும், சமாதனாமும் நிரந்தரமாக நிலை பெற்று, பால்ஸ்தீன நாடு ஒழுங்கு பெற்றால், இஸ்ரேலைவிட பேலஸ்தீனரக்ளுக்கே அதிக நன்மையும், வளமும் கிடைக்க வாய்ப்பு. இஸ்ரேலின் சுபிட்சத்திலிருந்து பயன் பெறலாம். (proximity benefits - மெக்ஸிகே, அமேரிக்கா அருகே இருந்து பயன் பெறுவதை போல)// - அதியமான்

பாலத்தீனர்களுக்கு இஸ்ரேலிடமிருந்து நன்மையும் வளமும் கிடைப்பது இருக்கட்டும். முதலில் அவர்களுக்கு விடுதலையை அளிக்க வேண்டாமா? பாலத்தீன் என்றொரு நாடு அமைக்கப்பட்டுவிட்டால் இப்போதுள்ள பிரச்சனைகளில் குறைந்தபட்சம் 50 சதவீதம் குறையுமே ?

//அடாவடி என்பது பார்வையாளர்களின் கோணத்திலிந்துதான்.'அடிக்கு அடி திருப்பி கொடு, இல்லையேல் எதிரிகள் நம்மைவலிமையற்றவனாக நினைத்து மேலும் அடாவடி செய்வர்' என்பதே இஸ்ரேலின் தத்துவம்.// - அதியமான்

இஸ்ரேலுக்கு அந்த தத்துவத்தை இவர்தான் கற்றுக் கொடுத்தார் போலும்.

//1980களுக்கு பின், பெரும்பாலான அரபிய நாடுகள், (ஏன், பி.எல்.ஓ உம்தான்) இஸ்ரேலை முழுவதுமாக அழிக்க வேண்டும் என்ற நிலைபாட்டிலிருந்து மாறி, பாலஸ்தீனர்களுக்கு ஒரு தனி நாடு கிடைத்தால் போதும், இஸ்ரேலுடன் peaceful co-existance என மாறின‌.// - அதியமான்

பாலத்தீனியர்களுக்கு ஒரு நாடு கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு வந்து சுமார் 30 ஆண்டுகளாகியும் அவர்களுக்கு கிடைத்த பலன் என்ன? அன்றைய நிலையிலிருந்து கொஞ்சமேனும் மேம்பாடு அடைந்திருந்தால், ஹமாஸ் போன்ற இயக்கங்கள் தோன்றியிருக்காது. (ஹமாஸ் தொடங்கப்பட்ட ஆண்டு 1987). ஹமாஸின் செயல்பாடுகளில் திருப்தி அடையாதவர்கள் ஹமாஸை விட தீவிரமாக செயல்படும் புதிய இயக்கங்களைத் தோற்றுவித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

//இஸ்ரேல் உருவான வரலாறு இன்று விவாதத்திற்கு தேவையில்லை. நிகழ்காலமும் , எதிகாலமும்தான் விவாதிக்கப்பட வேண்டும்.//- அதியமான்

ஒரு பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றால் அந்தப் பிரச்சனை எப்பொழுது தோன்றியது ? அதன் காரணர்கள் எவர் என்பதையெல்லாம் ஆராய்ந்த பிறகே, நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் குறித்துப் பேசவேண்டும் .

//நம்ம அரை டிக்கட் அழகப்பனை கேளுங்க;அவர் கூட மிக சீரிய ஆராய்ச்சி செய்து, "பெளத்தமும்,பார்ப்பனீயமும்,பிறப்போடு வருபவை;யாரும் தழுவு ஏற்க முடியாது" என்ற உண்மையை கண்டுபிடித்து எழுதுவார்// - பின்னூட்ட பாலா

பார்ப்பனீயத்தை எதிர்த்து, இந்தியாவை தாயகமாகக் கொண்டு தோன்றிய பௌத்தத்தை பார்ப்பனீயத்துடன் தொடர்புபடுத்தும் அளவு நான் முட்டாள் அல்ல. தவிரவும் அம்பேத்கர் சுமார் ஒன்றரை இலட்சம் மக்களுடன் பௌத்தத்தைத் தழுவியதை சரித்திரமும் மறைக்கவில்லை. நானும் மறக்கவில்லை .

//சம்பந்தப்பட்ட பாலஸ்தினியர்கள் மற்றும் இதர அரபிய நாடுகளுமே, இஸ்ரேல் என்ற நாட்டை ஏற்று கொண்டுவிட்டனர். பாலஸ்தீனிய நாட்டிற்கான எல்லைகளை வரைவு செய்வதில்தான் இன்னும் பிரச்சனை....// - அதியமான்

சம்பந்தப்பட்ட பாலத்தீனியர் (அப்பாஸ் குழு ) இஸ்ரேலை ஏற்றுக் கொண்டுவிட்டனர் என்பது உண்மைதான். ஆனால் இஸ்ரேல் பாலத்தீன் எனும் நாட்டை ஏற்றுக் கொண்டுள்ளதா?

இவற்றுக்கெல்லாம் பார்ப்பனர்களுக்கு பதில் தெரியும். ஆனாலும் யூதர்கள் மீதான அவர்களின் பாசம் அவர்களை இவ்வாறு எழுதச் செய்கிறது.

என் முந்தைய பதிவில் கூறியது போன்று, பார்ப்பனர் மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவிற்கு வந்தேறியதாக வரலாற்றாசிரியர் கூறுவர். அவர்கள் இந்தியாவிற்கு வரும் முன்னர் அவர்கள் இஸ்ரவேலர்களில் ஒருவராய் இருந்திருக்க வேண்டும் என்றே நான் கருதுகிறேன். அதனால்தான் என்னவோ பார்ப்பனர்கள் இஸ்ரேலை வலிந்து ஆதரித்து வருகின்றனர் என்ற என் கருத்து மேலும் வலுப்பெறுகிறது.

2 பின்னூட்டங்கள்:

said...

அழகப்பன் சார்,

தெளிவான, ஆணித்தரமான பதில்களுடன், போலி அறிவு ஜீவிகளின் கயமைத் தனத்தையும் அருமையாகத் தோலுரித்துக் காட்டியுள்ளீர்கள்.

நன்றி!

said...

நன்றி சவூதி தமிழன்.

உண்மையடியான் என்பவர் டோண்டுவிடம் நான் எழுப்பிய கீழ்க்கண்ட கேள்விக்குப் பதிலளித்து, நிலமெல்லாம் ரத்தம் பதிவின் 58ஆம் அத்தியாயத்தை முழுவதும் பின்னூட்டியுள்ளார். பின்னூட்டத்தின் நீளத்தைக் கருதி சுருக்கமாக அவரது பின்னூட்டம்:

//தங்களுக்கு கொடுத்த பகுதியை வைத்து இஸ்ரேல் ராஜ்ஜியம் செய்ய பாலஸ்தீனியர் அரபுகளின் தூண்டுதலின் பேரில் தங்கள் நிலப்பகுதிகளை ஜோர்டானிடமும் எகிப்திடமும் பறிகொடுத்தனர்.// - டோண்டு

இதற்கு ஏதேனும் ஆதாரம் உங்களிடம் இருக்கிறதா? 1949 ஆம் ஆண்டு இஸ்ரேல் என்ற நாடு உருவாகும்போது இருந்த வரைபடத்தையும் இன்றைய வரைபடத்தையும் பாருங்கள்.//

இதற்கு வரலாறு எல்லாம் புரட்ட வில்லை இஸ்லாமிய கைகூலியாக புத்தகம் எழுதிய பா.ராகவன் புத்தகத்தில் இருந்து ஒரு சில எடுத்துக்காட்டு.//

பா. ராகவன் இஸ்லாமிய கைக்கூலியா இல்லையா என்பதை அவருடைய நணபர்களாக அறியப்படும் பத்ரி போன்றோரிடம் கேட்டு தெளிந்து கொள்ளுங்கள்.

பா.ராகவனின் பதிவில் கூறப்பட்டுள்ள காஸா பகுதியும், மேற்குக் கரை பகுதியும் தற்போது இருப்பது இஸ்ரேலின் முழுக்கட்டுப்பாட்டில்தான். எனவே நீங்கள் குறிப்பிட்டுள்ளதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.