Friday, July 22, 2005

காவிரி தாய்

தமிழ் நாடு மற்றும் கர்நாடக அரசியல்வாதிகளுக்கு அவர்களின் அரசியல் வாழ்வு மரித்துப் போய்விடாமல் காக்கும் தாய்.
இந்திய தேசிய ஒற்றுமையை சில சந்தர்ப்பங்களில் கேள்விக்குறியாக்குவதும் இதே தாய்தான்.
அண்டை நாடான வங்கதேசத்துடன் நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தம் செய்து கொள்ள முடிந்த உங்களால் உங்கள் மாநிலங்களுக்குள் ஒப்பந்தம் செய்து கொள்ள முடியாததும் என்னால்தான் என்று கொக்கரிப்பதும் இந்த தாய்தான்.
அறிமுகம் போதுமென்று நினைக்கிறேன். இந்த தாய் யாருக்குச் சொந்தம்? தமிழ்நாட்டில் நாம் இருப்பதால் நமக்கும் அதில் உரிமை உண்டு என்று கேட்கிறோம். உரிமை இருக்கலாம். ஆனால் பற்றாக்குறை என்று வரும்போது...? வீராணம் நீரை சென்னைக்கு கொண்டு வரும் திட்டத்திற்கான எதிர்ப்புகளை இங்கு நினைவுறுத்த வேண்டுகிறேன்.
என்னதான் மாற்று? 24.07.2005 குமுதம் ரிப்போர்டரில் தீர்வு ஒன்று கண்டேன். அது சரியான தீர்வாக இருக்கக்கூடும் என்று கருதுகிறேன். மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் கூடுதல் அதிகாரம் பெற்றுள்ள கலைஞர் அவர்கள் இத்திட்டத்தை செயல்படுத்த முணைய வேண்டும்.

0 பின்னூட்டங்கள்: